Pages

Tuesday, 25 August 2026

பழகியவரைப் பிரிய மனம் வராது 168

காயாத உப்பங்கழிகள் மிகுந்துள்ள கடல் சார்ந்த சேர்ப்பு நிலத் தலைவனே! கேள்.
  • ஆராய்ந்து பார்த்துத் தெரிந்துகொள்ளக்கூடிய பண்புடையவர் சிலர்.
  • ஆராய்ந்து பார்த்தும் தெரிந்துகொள்ள முடியாத பண்புடையவர்கள் சிலர்.
  • யாராய் இருந்தாலும் பழகிய அவரைப் பிரிவது என்பது மனவருத்தம் தரும். 
  • அதலால் உள்ளூரப் பழகாமல் இருப்பது என்பது பழகுவதைக் காட்டிலும் கோடி மடங்கு சிறந்தது. 

  • There are some whose true nature can be understood through careful observation.
  • There are others whose true nature remains unfathomable even after close scrutiny.
  • Regardless of who they are, parting ways with someone with whom one has formed a bond brings sorrow.
  • Therefore, it is a million times better not to form such a bond in the first place than to experience the pain of separation.

தெரியத் தெரியுந் தெரிவிலார் கண்ணும்
பிரியப் பெரும்படர்நோய் செய்யும்; - பெரிய
உலவா இருங்கழிச் சேர்ப்ப யார்மாட்டும்
கலவாமை கோடி யுறும்.    168

சமண முனிவர் பாடல்களின் தொகுப்புநூல் நாலடியார் 


No comments:

Post a Comment