பக்கம் 33
புலந்திரன்
கலந்தாரி கோட்டையைக்
காண்கிறது
மேலாய்ப் பறந்தது வேந்தனது வான்புரவி
காரிழையாள் மாது கலந்தாரி கோட்டைகளாம்
கற்கோட்டை முத்திரையும் கர்னரது காவல்களும்
ஆழ மணல் பறித்து ஆகாயக் கோட்டை கட்டி
சுற்றி மதில் எழுப்பி சூரியனைக் காணாமல்
அஷ்ட மதில் எழுப்பி ஆதித்தனைக் காணாமல்
வாசல் பதினெட்டும் வைத்திருக்கும் காவல்களும்
விழித்த கண் சிமிட்டாத மெல்லியற்குக் காவல்களாம்
தாமக் குழலாட்கு தலையாரி ஓடிவந்து
நாகசுரம் ஊத நல் கவரி கொம்பு ஊத
கூடம் முழங்கவே குல வீரர்கள் சூழ
கொக்கரித்து நாற்றிசையும் கூத்தாடிப் பாடிவர
ஆர்ப்பரித்து ஓடிவந்தார் அன்ன நடையாட்கு
கண்டார் புலந்திரரும் கண்கள் ரெண்டும் கொள்ளாதே
இது
மாமன் காவல்களோ வைத்த வரிசைகளோ
என்று நகைத்து இந்திரரும் பார்த்திருந்தார்
சொக்கர்
பிராமணர் போல் வந்து
கர்னருக்குச் சொல்வது
மாலை முடியானும் வருவதற்கு முன்பாக
சோலை மலருடைய சொக்கரும் அப்போது
பஞ்சாங்க வேதியன் போல் பரமன் வடிவெடுத்து
மன்னர் கருணர் முன்பு மறையவர் போலே வந்து
ஆள் வருதாய் காணுது அதி கருண வீரியரே
பத்திரம் என்று சொல்லி பரமனும் போய் மறைந்தார்
சொல்லியே போய் மறைந்தார் சொக்கரும் அப்போது
கர்னர்
கலந்தாரி கோட்டை
வருகிறது
அத் தேச நாடு ஆளும் அதிகர்ன வீரியரும்
காரிகையாள் மாது கலந்தாரி கோட்டை வந்தார்
எண்ணவொண்ணா மகாசேனை எண்பத்து எண்ணாயிரம் பேர்
உருவின ஆயுதத்தை உறையிலே போடாமல்
விழித்த கண் சிமிட்டாமல் மெல்லியரைப் பார்த்திருந்தார்
தரும முடியானும் தலைவாசல் வந்து நின்று
அத்தண்ட காவலரை அதிகர்னர் தான் பார்த்து
அந்திப் பொழுதிலே ஐயர் வந்து சொன்னாரே
காவலர்கள் வீரியரே கண்ணுண்டாய்ப் பார்த்திருங்கள்
திட்டங்கள் சொல்லியே திரும்பும் அந்த வேளையிலே
கர்னர்
கலந்தாலிக்கு
நடன சேர்வை
வைத்தது
சுந்தரப் பூ முடியாள் தூக்கம் வருகுது என்று
கேளிக்கை வேண்டும் என்றாள் கிளிமொழியாள் நாயகமும்
அப்படியே நல்லது என்று அங்குராய சீர் கருணர்
நட்டுமுட்டு நாடகங்கள் நலமுடனே அனுப்பி வைத்தார்
சதுர் தீர்ந்து கொலு அதனில் தானமர்ந்தார் கொலுவதனில்
அப்போது மாதருக்கு ஆடலும் பாடலும்
பதினெட்டு மேளமும் பண்பாகத் தான் முழங்க
சிற்றிடையாள் மாதர்கள் சிலம்பு கலகல என
ஆடலும் கூத்தும் அரம்பையர் நாடகமும்
நாடகமும் கூத்தும் நடு நடுவே சிந்துகளும்
ஆடாத கூத்துகளும் ஆடினார் ஆயிரம் பேர்
கேளிக்கை பார்த்திருந்தாள் கிளி கவள வாயாளும்
புலந்திரன்
ஆகாயத்தில்
அதிசயப்படுகிறது
ஆடல் பாடல் சத்தம் ஆகாயம் தான் கேட்க
பெண்கள் குரலோசை புலந்திரற்குக் கேள்விபட
கோட்டையில் கேட்கிறது கொம்பனையாள் இருப்பிடமோ
தேவடியாள் சந்தடியோ தேன்மொழியாள் வாசலிலே
காது உற்றுக் கேட்டிருந்தார் கனத்த புரவியின் மேல்
காந்தாரிக்குச்
சொக்கர்
சொப்பனம்
சாதித்தது
மாலை முடியானும் வருவதற்கு முன்பாக
சோலை மலருடைய சொக்கருமே ஏது சொல்வார்
பஞ்சாங்க வேதியன் போல் பத்தினியாள் பக்கம் வந்து
மாது நித்திரை செய்கையிலே மறையவர் போலே வந்து
மங்கையரே உன்னுடைய மணவாளன் வந்தான் காண்
வந்தான்காண் என்று சொல்லி மாயமாய்ப் போய் மறைந்நதார்
வாசற்படி தனிலே மன்னன் நிற்கக் கண்டாளே
ஏறிட்டுப் பார்த்தது போல் இந்திரனார் வடிவை
அலர் தாமரை நிறமும் ஆர் பவளச் செவ்வாயும்
மார்பில் பதக்கமும் வச்சிதமணித் தாழ்வடமும்
காதில் மணியழகும் கட்டழகன் ஒப்பனையும்
உத்தமர்கள் புத்திரன் தன் உறுமாலைக் கட்டழகும்
ஒருவர்க்கு ஒருவர் உளம் துடிக்கப் பேசினதும்
உற்றார் உறவுகளும் உறவு முறை கட்டளையும்
மாணிக்க மெத்தையிலே மன்னவரும் சென்று ஏறி
வெற்றிகள் தின்று விரும்பி விளையாடினதும்
தக்கோலம் தின்று தழுவி விளையாடினதும்
மாது விடை இல்லாமல் மன்னன் எழுந்திருந்து
போனால்-போல் கண்டு ப்பொற்கொடியும் கண் விழித்தாள்
சொர்ப்பனம் கண்டதல்லால் சுந்தரரைக் கண்டதில்லை
என்
ஜொன்மம் அழியும் மட்டும் சிறை இருக்க நீதி உண்டோ
வண்ணம் சிறை இருக்க வைத்தீர் மகாதேவர்
இச்
சிறை காக்க என்னை ஈஸ்வரரே வைத்தீரே
மைத்துனரைத் தான் நினைத்து மாது மனம் தான் உருகி
எக்காலம் செல்லுமோ இந்திரரை நான் காண
கண்ட கனவையெல்லாம் காரிழை தன்னுள்ளே
தோழிமார் தன்னுடனே சொன்னோமேயாமாகில்
எந்நாளும் இந்நினைவே என்பார்கள் ஏந்திழையார்
தாமக் குழலாளும் தன்மனதில் தான் அடக்கி
வேல்பொருதும் கண்ணாளும் விசாரத்துடன் படுத்தாள்
(தாதிமார் வேறு மண்டபத்தில் படுத்தது)
ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னர்,
18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழேந்திப் புலவர்
எளிய நடையில்
வெண்கலிப்பா யாப்பில் இயற்றிய நூல்
No comments:
Post a Comment