நினைப்புப் பேயே
நினைப்பே
கேள்
71
மந்திரம் இல்லையடி – அகப்பேய் – வாதனை இல்லையடி
தந்திரம் இல்லையடி – அகப்பேய் – சமயம் அழிந்ததடி
- மந்திரம், தந்திரம் - இல்லாவிட்டால் வாதனை (துன்பம்) இல்லை. நினைவைத் துன்புறுத்தும் சமயங்களும் இல்லை.
72
பூசை பாசமடி – அகப்பேய் – போதமே கொட்டமடி
ஈசன் மாயையடி – அகப்பேய் – எல்லாமும் இப்படியே
- பூசை ஆசையை நிறைவேற்றச் செய்யப்படுகிறது.
- அங்கே சமய அறிவு கொட்டம் அடிக்கிறது.
- ஈசன் என்பதே ஒரு மாயை.
- எல்லாமும் இப்படித்தான்.
- Worship is performed to fulfill desires.
- Therein, religious dogma runs rampant.
- The very concept of the Lord is an illusion.
- Everything is just like this.
73
சொல்ல லாகாதே – அகப்பேய் – சொன்னாலுந் தோடமடி
இல்லை இல்லையடி – அகப்பேய் – ஏகாந்தங் கண்டாய்
- எதையும் சொல்லக்கூடாது
- சொன்னால் சோஷம் வரும்
- நினைப்பே! உன்னிடம் அது இருப்பதில்லை
- எல்லாம் ஏகாந்தம். (ஒன்றுமில்லா முடிவு).
- Don't say anything
- If you say it, you will get hurt
- O mind! You don't have it
- Everything is loneliness. (The end of nothing).
74
தத்துவத் தெய்வமடி – அகப்பேய் – சதாசிவ மானதடி
மற்றுள்ள தெய்வமெல்லாம் – அகப்பேய் – மாயை வடிவாமே
- சதாசிவம் ஒன்றே தத்துவத் தெய்வம்
- மற்றவை மாயை
75
வார்த்தை அல்லவடி – அகப்பேய் – வாச மகோசரத்தை
ஏற்ற தல்லவடி – அகப்பேய் – என்னுடன் வந்ததல்ல
- நான் சொல்பவை வெறும் வாய்ச்சொல் அன்று
- மணக்கும் திருவாக்கு
- இவை என்னிடம் இருப்பவை அல்ல.
- இறைவனிடம் உள்ளவை
- What I speak are not mere words;
- They are fragrant, divine utterances.
- These do not originate from me;
- They reside with God.
0
அகப்பேய்ச் சித்தர் பாடல்கள்
அகம் என்னும் தன் நினைவைப்
பேய்ப்பெண்ணாக உருவகப்படுத்திக்கொண்டு,
அவளை விளித்துக் கூறும் அறிவுரையாக,
பிறருக்குக் கூறும்
விளையாட்டுக் கண்ணி - பாடல் -- 75 / 90
No comments:
Post a Comment