நினைப்புப் பேயே
நினைப்பே
கேள்
76
சாத்திரம் இல்லையடி – அகப்பேய் – சலனங் கடந்ததடி
பார்த்திடல் ஆகாதே – அகப்பேய் – பாவனைக் கெட்டாதே
- இறைவனுக்குச் சாத்திரம் இல்லலை
- இறைவன் நினைவலைகளுக்கு அப்பாற்பட்டவன்
- அவனைப் பார்க்க முடியாது
- பாவனை செய்யவும் முடியாது
- The Divine is beyond the scope of scriptures.
- The Divine transcends the waves of thought.
- It cannot be seen;
- Nor can it be conceived.
77
என்ன புடித்தால் என் – அகப்பேய் – ஏது தான் செய்தால் என்
சொன்ன விதங்களெலாம் – அகப்பேய் – சுட்டது கண்டாயே
- என்ன படித்தாலும்
- எது செய்தாலும்
- அவை நினைவைச் சுடுகின்றன
78
தன்னை அறியவேணும் – அகப்பேய் – சாராமற் சாரவேணும்
பின்னை அறிவதெலாம் – அகப்பேய் – பேயறி வாகுமடி
- உன்னையும் இறைவனையும் அறிந்துகொள்ள வேண்டும்.
- நீயும் இறைவனும் ஒன்றாகச் சாராமல் சார்ந்திருக்க வேண்டும்
- மற்றவை பேயறிவு
79
பிச்சை எடுத்தாலும் – அகப்பேய் – பிறவி தொலையாதே
இச்சை அற்றவிடம் – அகப்பேய் – எம்இறை கண்டாயே
- இறைவனிடம் பிச்சை கேட்டாலும் பிறவி தொலையாது
- ஆசை இல்லாத இடத்தில் இறைவன் இருப்பான்
80
கோலம் ஆகாதே – அகப்பேய் – குதர்க்கம் ஆகாதே
சாலம் ஆகாதே – அகப்பேய் – சஞ்சலம் ஆகாதே
- வேடம் போட்டுக்கொள்ளாதே
- குதர்க்கம் (ஏட்டிக்குப் போட்டியாக எதையும்) பேசாதே
- மாயாசாலம் செய்யாதே
- இவற்றால் சஞ்சலம் உண்டாகும்
0
அகப்பேய்ச் சித்தர் பாடல்கள்
அகம் என்னும் தன் நினைவைப்
பேய்ப்பெண்ணாக உருவகப்படுத்திக்கொண்டு,
அவளை விளித்துக் கூறும் அறிவுரையாக,
பிறருக்குக் கூறும்
விளையாட்டுக் கண்ணி - பாடல் -- 80 / 90
No comments:
Post a Comment