Pages

Friday, 17 April 2026

எதுவாயினும் அது ஈசன் பாசம் - Whatever it may be, it is the Lord's love.

நினைப்புப் பேயே
கேள்

31
அறிந்து நின்றாலும் – அகப்பேய் – அஞ்சார்கள் சொன்னேனே
புரிந்த வல்வினையும் – அகப்பேய் – போகாதே உன்னை விட்டு
  • எதை எப்படித் தெரிந்துகொண்டாலும் நீ செய்த வினை உன்னை விட்டுப் போகாது.
32
ஈசன் பாசமடி – அகப்பேய் – இவ்வண்ணங் கண்ட தெல்லாம்
பாசம் பயின்றதடி – அகப்பேய் – பரமது கண்டாயே
  • எதுவாயினும் அது ஈசன் பாசம்
33
சாத்திர சூத்திரமும் – அகப்பேய் – சங்கற்பம் ஆனதெல்லாம்
பார்த்திடல் ஆகாதே – அகப்பேய் –பாழ் பலங்கண்டாயே
  • சாத்திரம், சூத்திரம், சங்கற்பம் - எதுவாயினும் அது ஏதுமில்லாதது; பயனற்றது.  
34
ஆறு கண்டாயோ – அகப்பேய் – அந்த வினை தீர
தேறித் தெளிவதற்கே – அகப்பேய் – தீர்த்தமும் ஆடாயே
  • வினை தீர, சிந்தனை தெளிந்தோடும் ஆற்றில் நீராடு.
35
எத்தனை காலமுந்தான் – அகப்பேய் – யோகம் இருந்தாலென்
முத்தனு மாவாயோ – அகப்பேய் – மோட்சமும் உண்டாமோ
  • எத்தனைக் காலம் யோகம் செய்தாலும் நீ முத்தன் ஆகப்போவதில்லை. நீ மோட்சத்தை அடையப்போவதும் இல்லை.
0
அகப்பேய்ச் சித்தர் பாடல்கள் 
அகம் என்னும் தன் நினைவைப் 
பேய்ப்பெண்ணாக உருவகப்படுத்திக்கொண்டு, 
அவளை விளித்துக் கூறும் அறிவுரையாக,
பிறருக்குக் கூறும்
விளையாட்டுக் கண்ணி - பாடல் -- 35 / 90

No comments:

Post a Comment