திரு என்றால் என்ன
திரு என்னும் சொல் யாவரும் விரும்பும் தன்மையை உணர்த்தும்,
இச்சொல் திருக்குறளில் என்ன பொருளில் கையாளப்பட்டுள்ளது என்பதைப் பார்க்கலாம்.
கவலை இல்லாமை
- நன்று அறிவாரின் கயவர் திரு உடையார் நெஞ்சத்து அவலம் இலர்
செல்வம்
- அழுக்காறு என ஒரு பாவி திரு செற்று தீ உழி உய்த்துவிடும்
- வினைக்கண் வினை உடையான் கேண்மை வேறு ஆக நினைப்பானை நீங்கும் திரு
- ஊருணி நீர் நிறைந்து அற்றே உலகு அவாம் பேர் அறிவாளன் திரு
- இரு வேறு உலகத்து இயற்கை திரு வேறு தெள்ளியர் ஆதலும் வேறு
- நல்லார்-கண் பட்ட வறுமையின் இன்னாதே கல்லார்-கண் பட்ட திரு
- இனத்து ஆற்றி எண்ணாத வேந்தன் சினத்து ஆற்றி சீறின் சிறுகும் திரு
- இரு மன பெண்டிரும் கள்ளும் கவறும் திரு நீக்கப்பட்டார் தொடர்பு
- முயற்சி திருவினை ஆக்கும் முயற்று இன்மை இன்மை புகுத்திவிடும்
- பருவத்தொடு ஒட்ட ஒழுகல் திருவினை தீராமை ஆர்க்கும் கயிறு
அழகு
- கருமத்தான் நாணுதல் நாணு திரு_நுதல் நல்லவர் நாணு பிற
- கருமணியின் பாவாய் நீ போதாய் யாம் வீழும் திரு_நுதற்கு இல்லை இடம்
- நன்று அறிவாரின் கயவர் திரு உடையர் நெஞ்சத்து அவலம் இலர்
திருமகள்
- அறன் அறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும் திறன் அறிந்து ஆங்கே திரு
- அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள் தவ்வையைக் காட்டிவிடும்
No comments:
Post a Comment