பதினொராஞ் சூத்திரம்
0
- சித்தன் ஆன்மா ஈசன் உயிரைக் காணும்.
- அன்பு செய்யும் அறிவினைக் கொண்டவன் சித்தன்.
- இவன் மாயை நீங்கி, சிவனை மருவுவான். -- 310
0
- பரஞானம் என்பது தன் பரனைக் காண்பது.
- அது பதார்த்தங்களைப் பார்க்காது.
- அஞ்ஞானம், வாச்சிய வாசக ஞானம் போன்ற ஞானங்களை விட்டுவிட்டு சிவஞானத்தில் நிலைகொண்டிருக்கும். 311
0
- உடம்பு இருந்தால் ஆணவம் கன்மம் மாயை என்னும் மலங்கள் இருக்கத்தான் செய்யும்.
- ஞானத்துக்கு மலம் வேண்டியதில்லை.
- ஞானம் இருந்தால் சிவனிடம் இருக்கலாம். -- 312
0
- மெய்ஞ்ஞானம் வந்ததும் சிவம் பிரகாசிக்கும்.
- சீவன் முத்தன் ஆகும்.
- காயம் திரியும். -- 313
0
- ஆணவத்துக்கு முடிவே கிடையாது.
- செம்பில் களிம்பு போல் ஒட்டிக்கொள்ளும்.
- சுத்தன் ஆனால் முத்தன் அருளைப் பெறலாம். -- 314
0
- நெல்லுடன் இருக்கும் தவிடும் உமியும் அநாதி.
- அரிசியில் இவை இல்லை.
- அரிசி முளைக்க அவை வேண்டும்.
- அதுபோல
- சிவனை நினைக்க மும்மலம் உதவும். -- 315
0
- எவ்விடத்தும் இறைவன் அடி
- இறைவன் உயிர்களின் தலைவன்
- அகர ஒலிபோல் முதல்வன் -- 316
0
- குருடனுக்கு சூரிய ஒளியும் இருள்.
- நாம் இறைவனைப் பார்க்கும் அறிவுக்கண் இல்லாதவர். -- 317
0
- சிவன் நிழலாக என் உயிர் இருக்கட்டும்
- நீரொடு நீர் சேர்ந்தாற்போல் என் நினைவு சிவனிடம் இருக்கட்டும் -- 318
0
- களிம்பு போன செம்பு செம்பொன் போலத் தோன்றும்.
- என் உயிரும் அப்படித் தோன்றும். -- 319
0
- சிவன், சீவன் இரண்டும் ஒன்றன்று.
- சிவன் முத்தியின்பம் தருவான்.
- சீவன் புலனின்பமே தரும். -- 320
0
- இரும்பைக் காந்தம் இழுக்கும்.
- எரியும் இரும்பை இழுக்குமா?
- சீவன் இரும்பு
- சிவன் எரியிரும்பு போன்றவன் -- 321
0
அருணந்தி சிவாச்சாரியார் இயற்றிய சிவஞான சித்தியார் சுபக்கம் - 328 படல்கள் --- சிவஞான சித்தியார் மூலம் --- இப்பதிவில் பயனியல் பதினோராம் சூத்திரம் --- பாடல் 321 முடிய
![]() |
| இறைவன் காயந்த நிலையில் இருக்கும் இரும்பு |

No comments:
Post a Comment