பன்னிரண்டாஞ் சூத்திரம்
- மும்மலங்கள் இறைவன் தாளைச் சேர விடுவதில்லை
- அவற்றை அறுக்க வேண்டும்
- சிவனடியாரோடு சேர்ந்துகொள்ள வேண்டும்
- ஆலயங்களை அரன் என்று நினைத்துத் தொழவேண்டும்
- அடியாருடன் ஆடிப் பாட வேண்டும்
- இதுதான் சிவஞானம். -- 322
0
- ஈசன் மாட்டு அன்பு இல்லாதவர் யார் மாட்டும் அன்பு இல்லாதவர் ஆவர்
- எந்த உயிர் மாட்டும் அன்பு இல்லாதவர்
- தன் மாட்டும் அன்பு இல்லாதவர்
- அவர்கள் அறிவில்லாப் பிணங்கள்
- அவர்கள் பிறந்தாலும் இறந்தாலும் பிணக்குதான்
- அவர்களை ஒதுக்கித் தள்ளிவிடுங்கள்.
- அடியார்க்குத் தொண்டு செய்வதைக் கடமையாகக் கொள்ளுங்கள்
- அருள்ஞானக் குறியில் கூத்தாடுங்கள் -- 323
0
- உடல், உயிர், அறிவு - அனைத்தும் சிவன் அருள்
- சிவனடியாரிடம் பாசம் காட்டித் தொழுதிடுங்கள் -- 324
0
- விறகில் எரி போல் இறைவன் தோன்றுவான்
- அவரவர் விரும்பும் வடிவில் தோன்றுவான்
- தாய் குழந்தைக்குப் பால் தருவது போல் அருள் தருவான் -- 325
0
- ஞானம், யோகம், கிரியை, சரியை - நான்கிலும் இறைவன் உள்ளான்
- அவனே ஞானகுரு -- 326
0
- மந்திரம், மருந்து, யோகம் - அவன்
- அணிமா முதலான கலைகளில் வல்ல ஆசான் ஈசனைக் காட்டுவான். -- 327
0
- பரம்பிரமம்
- பரசிவன்
- பரஞானம்
- பராபரன்
- என்று எண்ணி அருள் குருவை வழிபடுவோமாக. -- 328
0
சிவஞானசித்தியார் சுபக்கம் முற்றிற்று
அருணந்தி சிவாச்சாரியார் இயற்றிய சிவஞான சித்தியார் சுபக்கம் - 328 படல்கள் --- சிவஞான சித்தியார் மூலம் --- இப்பதிவில் பயனியல் பன்னிரண்டாம் சூத்திரம் --- பாடல் 328 முடிய

No comments:
Post a Comment