Pages

Sunday, 12 April 2026

ஆன்மா உணர்ச்சியோ அறிவோ மட்டும் அன்று The soul is neither mere emotion nor mere intellect

ஆன்மா
  • ஆன்மா அருவமும் உருவமும் பெற்றிருக்கும் தன்மையதாக ஆவது இல்லை. 
  • எந்தப் புலனாலும் காணமுடியாத அருவத் தன்மையைத்தான் பெற்றிருக்கும். 
  • தீ போன்றது அன்று. -- 201
0
  • ஆன்மா 
  • நிலா போன்று வளர்ந்து தேய்வதும் அன்று  -- 202
0
  • ஆன்மா
  • ஆகாயம் போலத் தெரியாததும் அன்று.
  • உருவோடு ஒட்டிக்கொண்டு தன்னைப் புலப்படுத்துவது. -- 203
0
  • ஆன்மா
  • அசித்து போல் உணர்ச்சி இல்லாதது அன்று
  • சித்து போல் வெறும் உணர்ச்சியும் அன்று. 
  • அறிவு என்னும் சித்தைப் பெற்றிருக்கும் அசித்து. -- 204
0
  • உயிரை அணு என்று சொல்ல முடியாது.
  • அணுவுக்கு எடை உண்டு. 
  • உயிருக்கு எடை இல்லை. -- 205
0
  • உடல் முழுவதும் உயிர் பரவியிருக்கிறது என்றும் சொல்வதற்கில்லை. 
  • சில  உறுப்புகளை இழந்த பின்னரும் உயிர் இருக்கிறது. -- 206
0
  • உயிரை வெறும் உணர்ச்சி என்றோ, அறிவு என்றோ சொல்வதற்கில்லை.
  • உறங்கும்போது நல்லுணர்வும், நனவறிவும் இல்லையே -- 207
0
  • உயிர் உடலெங்கும் பரவியிருகிறது என்றும் சொல்வதற்கில்லை. 
  • எல்லாப் புலனுணர்வும் எல்லா இடங்களிலும் இல்லையே -- 208
0
  • ஆன்மா சுத்தமானது. அதனை உடல் மறைக்கிறது என்றும் சொல்வதற்கில்லை. 
  • செயல்க்களின் வழியே ஆன்மாவுக்கு ஞானம் பிறக்கிறது
  • வீடுபேறு விரும்புகிறது. -- 209
0
  • ஆன்மா பசுத்துவம் (பாசம்) பெற்ற பசு. 
  • The Soul is a *Pasu* (bound entity) that has acquired the state of *Pasutvam* (bondage).
  • ஆன்மா அநாதியை மறைத்து நிற்கும். -- 210
0

அருணந்தி சிவாச்சாரியார் இயற்றிய சிவஞான சித்தியார் சுபக்கம்  - 328 படல்கள் --- சிவஞான சித்தியார் மூலம் --- இப்பதிவில்  இலக்கணவியல் நான்காஞ் சூத்திரம் --- பாடல் 210 முடிய   

No comments:

Post a Comment