Pages

Sunday, 12 April 2026

ஆன்மாக்களின் அறிவு வேறுபட்டிருக்கும் The knowledge of souls varies.

இலக்கணவியல் 
நான்காஞ் சூத்திரம்
   


  • யான் என்பது ஆன்மா.
  • உணர்ச்சிதான் இதற்குக் காரணம்.
  • ஐம்புலன் உணர்ச்சிகளில் ஒன்று மற்றொன்றை உணராது. 
  • தன் முனைப்போடு செயல்படும்
  • அதனால் அது தன்மாத்திரை
  • ஆன்மா தன்மாத்திரைகளினின்று வேறுபட்டது. 
  • புறக்கருவி. -- 191
0

  • மனம், புத்தி, அகங்காரம், சித்தம் ஆகிய நான்கும் கருவிகள். 
  • ஆன்மா போன்று வரும். 
  • ஒளி தரும் 
  • ஒன்றிலிருந்து மற்றொன்று விலகி நிற்கும். 
  • இவை பசுஞானம்.
  • சிவஞானம் இவற்றை விட மேலானது. -- 192
0
  • அ உ ம் மூன்றும் (ஓம்)
  • மனம், புத்தி, ஆங்காரம்
  • என்னும் நிலைகளைக் கொண்டவை. -- 193
0
  • அயன், அரி, அரன், ஈசன், சதாசிவம் - இவை அதிதெய்வங்கள். 
  • ஆன்மா பரவும் இடங்கள். -- 194
0
  • ஆன்மாவின் வடிவம் அநேகார்த்த கூட்டம். 
  • அதாவது ஆன்மாவின் உணர்வு ஒவ்வொன்றிலும் வேறுபட்டிருக்கும். -- 195
0
  • அறிவு விரும்பும் செயல் அனலும் வெம்மையும் போல இருக்கும். 
  • குணம், குணபாவங்களைக் கொண்டிருக்கும். -- 196
0
  • இவை உடலில் ஒன்றி நிற்கும். -- 197
0
  • காந்தமும் இரும்பும் போல் உடலில் ஒட்டிக்கொண்டிருக்கும். -- 198
0
  • உடல் அநித்த பூதங்களால் ஆனது. 
  • இதன் பரிணாமம் மாறும். -- 199
0
  • உடலில் உயிர்
  • தூலத்தில் சூக்குமம்
  • சூக்கும் மனம் முதலான தன்மாத்திரைகளைக் கொண்டது. 
  • உடல் அசித்து. -- 200
0

அருணந்தி சிவாச்சாரியார் இயற்றிய சிவஞான சித்தியார் சுபக்கம்  - 328 படல்கள் --- சிவஞான சித்தியார் மூலம் --- இப்பதிவில்  இலக்கணவியல் நான்காஞ் சூத்திரம் --- பாடல் 200 முடிய   

No comments:

Post a Comment