தமிழ்வளம், தமிழர் வாழ்வியல் காட்டும் 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட பாடல், முந்நூறுக்கு மேற்பட்ட நூல்கள் - விளக்கம்
Pages
▼
Tuesday, 14 April 2026
உயிரை உயிரால் பார்க்க முடியாது - the soul cannot perceive the soul
ஒன்பதாஞ் சூத்திரம்
பாச ஞானம் என்பது உலகியல் அறிவு
பசு ஞானம் என்பது உயிர் பற்றிய அறிவு
பதி ஞானம் என்பது இறை பற்றிய அறிவு
இவற்றோடு மனம் எதையோ தேடி அலைகிறது
எந்த நிழலிலும் நிற்கவில்லை
ஆசை என்னும் பேய்த்தேரில் ஏறிக்கொண்டு அலைகிறது
ஐந்தெழுத்து என்னும் பிடிப்பு கிடைத்தவுடன் அதனைப் பற்றிக்கொண்டு மனம் தங்கிக்கொள்கிறது. -- 292
0
வேதம், சாத்திரம், மனு எழுதிய மிருதி என்னும் நெறிநூல், புராணம், கலைஞானம் - முதலானவற்றில் எல்லாம் தேடி அலையாமல், பதி பசு பாசம் பற்றிக் கூறி, சிவன் இயல்பை உணர்த்துகிறேன் - என்கிறார் ஆசிரியர். -- 293
0
சடங்குகளிலிருந்து விடுபட்டு முத்தி பெறவேண்டும்
பசு ஞானம் என்பது உயிர் பற்றிய அறிவு
உடலின் இயக்கத்தால் இது உணரப்படுகிறது. -- 294
0
செயல், வாக்கு, சிந்தை - எதனாலும் சிவனை அணுக முடியாது
அவன் உடலாகவும், அறிவாகவும் இருந்து தன்னைக் காட்டிக்கொண்டிருக்கிறான். -- 295
0
கண் பிறவற்றைப் பார்க்கும்
தன் கண்ணைத் தன்னால் பார்க்க முடியாது.
அப்படித்தான் உயிரை உயிரால் பார்க்க முடியாது -- 296
The eye perceives other things;
yet, it cannot see itself.
In the same way, the soul cannot perceive the soul.
0
சிவன் தனக்கென எந்தக் குணமும் இல்லாதவன்.
அவனை யாராலும் நினைக்க முடியாது.
எதுவும் இல்லாதவன்.
அருள் தருபவன். - 297
0
*நான்* என்னும் உணர்வு அகன்ற பின்பும் அவனைக் காண முடியவில்லை
நான் அவன் இல்லை
ஆனால் அவன் என்னில் இருக்கிறான் -- 298
I am not him,
but he is within me.
0
சூரியனை மறைக்கும் பூமி-நிழல் போல *சிவாயநம* என்னும் ஐந்தெழுத்து சிவனைக் காட்டும். -- 299
0
சத்தி மேலோங்கின் சதாசிவத்தைப் பார்க்கலாம். -- 300
0
மலரில் மணம்
எரியில் புகை
தெரிவது போல, சிவனைக் காணவேண்டும். -- 301
Just as fragrance is perceived in a flower,
and smoke in a fire,
so too must one perceive Shiva.
0
பூக்களைப் பறிக்காமல், உதிர்ந்த மலர்களைக் கொண்டு பூசை செய்ய வேண்டும். -- 302
0
விறக்கில் தீ போல
பாலில் நெய் போல
பழத்தில் சுவை போல - இறைவன் இருக்கிறான்.
காய்ச்சிய இரும்பு போல் நம் உடலில் இருக்கிறான். -- 303
He resides within our body like heated iron.
0
அருணந்தி சிவாச்சாரியார் இயற்றிய சிவஞான சித்தியார் சுபக்கம் - 328 படல்கள் --- சிவஞான சித்தியார் மூலம் --- இப்பதிவில் சாதனவியல் ஒன்பதாஞ் சூத்திரம் --- பாடல் 303 முடிய
No comments:
Post a Comment