சைவச் சடங்குகளை, சைவ சித்தாந்தம் சைவக் கலை என்று கூறுகிறது.
நிலாவின் தோற்றத்தில் கலை வளர்வது போல, சிவனை அடையப் பின்பற்றப்படும் நெறிமுறைகளைக் கூறுவது சைவக்கலை.
சைவ சித்தாந்தத்தில் 5 வகையான கலைநிலைகள் குறிப்பிடப்படுகின்றன.
அவை: 1.நிவர்த்தி -- 2. பிரதிஷ்டா -- 3. வித்யா-- 4. சாந்தி -- 5. சாந்தியாதீதம் - என்பன.
- நிவர்த்தி என்பது செய்த பாவங்களை நீக்கிக்கொள்ளும் சடங்கு.
- பிரதிஷ்டா என்பது மந்திரம் சொல்லி, கோயிலில் சிலை வைத்தல். இதனைத் தொல்காப்பியம் காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுதல், பெரும்படை, வாழ்த்தல் ஆகிய ஆறும் போரில் வீர மரணமடைந்த வீரர்களுக்கு நடுகல் எடுக்கும் ஆறு முறைமைகள் என்று கூறுகிறது.
- வித்யா என்பது சிவனைப் பற்றிய கல்வியைப் புகட்டல்.
- சாந்தி என்பது சினம் கொண்டு அழிக்கும் தெய்வங்களை அமைதிகொள்ளச் செய்தல்.
- சாந்தியாதீதம் என்பது ஆன்மா இறைநிலையில் ஒன்றாகும் உச்ச-கட்டம்.
![]() |
| சிவன் |

No comments:
Post a Comment