நினைப்புப் பேயே
கேள்
6
வாக்காதி ஐந்தடியோ - அகப்பேய் – வந்த வகாகேளாய்
ஒக்கம் அதானடி - அகப்பேய் - உண்மையது அல்லவடி
- வாக்கு முதலான புலன்கள் ஐந்து
- அவை உணர்வுகளின் ஓக்கம் (மேம்பாடு)
- இவை நினைவு அன்று
- போலி உணர்வு
7
சத்தா தி ஐந்தடியோ - அகப்பேய் – சாத்திரம் ஆனதடி
மித்தையும் ஆகுமடி - அகப்பேய் – மெய்யது சொன்னேனே
- சத்து முதலானவை ஐந்து
- இதனைச் சாத்திரங்கள் சொல்கின்றன
- அவை மித்தை (மாயை)
- மித்தைதான் உண்மை
8
வானாதி ஐந்தடியோ - அகப்பேய் – வண்மையாய் வந்ததடி
தெசநாடி பத்தேடி - அகப்பேய் – திடன் இது கண்டாயே
- வானம் முதலானவை ஐந்து
- அவை ஐம்பூதங்கள்
- அவை இறைவனின் வளங்கள்
- இவை உறுதியானவை
காரணம் ஆனதெல்லாம் - அகப்பேய் - கண்டது சொன்னேனே
மாரணங் கண்டாயே - அகப்பேய் - வந்த விதங்கள் எல்லாம்
- நான் சொன்னவை காரணங்கள்
- நான் கண்டவை
- இவை மாரணம் (இயக்கத் துடிப்புகள்)
- இயக்கத் துடிப்புகளால் அனைத்தும் தோன்றின
10
ஆறு தத்துவமும் - அகப்பேய் – ஆமகஞ் சொன்னதடி
மாறாத மண்டலமும் - அகப்பேய் – வந்தது மூன்றடியே
- தத்துவம் ஆறு
- ஆகமங்கள் இப்படிச் சொல்கின்றன
- நமக்கென்று வந்தவை மூன்று மலங்களே
- இவை மாறாத மண்டலங்கள்
அகப்பேய்ச் சித்தர் பாடல்கள்
அகம் என்னும் தன் நினைவைப்
பேய்ப்பெண்ணாக உருவகப்படுத்திக்கொண்டு,
அவளை விளித்துக் கூறும் அறிவுரை -- 10 / 90
No comments:
Post a Comment