Pages

Tuesday, 14 April 2026

சிவ மார்க்கம் The Paths to Attain Shiva

  • சிவன் கோயிலைக் கூட்டிச் சுத்தம் செய்தல்
  • மெழுகல்
  • சிவனுக்குப் பூமாலை சாத்துதல்
  • விளக்கு வைத்தல்
  • பாடியாடல்
  • சிவனடியாரைப் பேணுதல்
  • முதலானவை தாத மார்க்கம். -- 271
0
  • மணப்புகை காட்டல், 
  • மஞ்சனம் ஆட்டல், 
  • அமுது படைத்தல்
  • பூசை செய்தல்
  • முதலானவை புத்திர மார்க்கம் -- 272
0
  • சிவனை உடல் மைங்களில் நிறுத்தி அட்டாங்க யோகம் செய்தல் சக மார்க்கம் -- 273
0
  • புராண, வேத சாத்திரங்களை உணர்ந்துகொள்ளல்
  • பல மார்க்கப் பொருள்களைப் புறம் தள்ளி, பதி-பசு-பாச நெறியைப் பின்பற்றுதல் சன்மார்க்கம் -- 274
0
  • ஞான நூல்களை ஓதல், ஒதுவித்தல், கேட்டல், கேட்பித்தல், சிந்தித்தல் 
  • தவம், செபம், தியானம் செய்தல் - முதலானவை வீடு பெற விரும்புவோர் செய்யும் கன்மங்கள். இது ஞான மார்க்கம் -- 275
0
  • கேட்டு சிந்தித்தல், தெளிவு பெறுதல், நிட்டை செய்தல் (நிறைவடைதல்), கிளத்தல் - நான்கும் ஞானநிலை -- 276
0
  • தானம், யாகம் செய்தல், ஆச்சிரமத்தில் இருந்து தவம் செய்தல், சாந்தி விரதம் கடைப்பிடித்தல், யோகாசனம் செய்தல் முதலானவை உற்பவ நெறி -- 277
0
  • சிவனடியார்க்குத் தானம் வழங்குதல் உயர்ந்த நெறி ஆகும். -- 278
0
  • ஞானத்தால் வீடு பெறுதலே மேலான நெறி -- 279
0
  • சூரியகாந்தக் கல் இரண்டை ஒன்றோடொன்று உரசினால் தீ பற்றுவது போல, துரியாதீத தவத்தில் சிவன் தோன்றுவான். -- 280
0

அருணந்தி சிவாச்சாரியார் இயற்றிய சிவஞான சித்தியார் சுபக்கம்  - 328 படல்கள் --- சிவஞான சித்தியார் மூலம் --- இப்பதிவில்  சாதனவியல் எட்டாஞ் சூத்திரம் --- பாடல் 280 முடிய   
சிவன்


No comments:

Post a Comment