Pages

Friday, 10 April 2026

அடுத்த பிறவியில் In the next birth

  • முன் செய்த வினையால் அனுபவிக்கும் விதியை அனுபவித்துக்கொண்டு 
  • பிறருக்கு இன்பமோ துன்பதோ செய்பவன் இதன் பலனை அடுத்த பிறவியில் அனுபவிப்பான். -- 101
0
  • இன்று விதைத்த விதை மேலைக்குப் பலன் தருவது போல் இந்தப் பிறவியில் செய்த வினை மேலைப் பிறவியில் பலனைத் தரும். -- 102
0
  • இதம், அகிதம் (இன்பம், துன்பம்) தரும் செயல்களைச் செய்தல். 
  • பிறர் மகிழும் செயல்களைச் செய்ய வேண்டும்
  • பிறர் வெறுக்கும் செயல்களைச்செய்யக்கூடாது -- 103
0
  • இதம் செய்வோர்க்கு அனுகிரகம் செய்வான். 
  • (நல்லது செய்வோர்க்கு அருள் தருவான்)
  • அகிதம் செய்வார்க்கு நிக்கிரத்தை வைப்பான். 
  • (துன்புறுத்துவோர்க்கு தண்டனை தருவான்) -- 104
0
  • ஈசன் தண்டனையும் அருளே -- 105
0
  • ஈசன் வழங்கும் தண்டனையானது, குழந்தையை அடித்துத் திருத்துவது போன்றது. -- 106
0
  • நெல்லுக்குத் தழையெரு போடுவது போன்றது இறைவன் தரும் நலம்.
  • நெற்பயிருக்கு மருந்து தெளிப்பது போன்றது இறைவன் தரும் தண்டனை. -- 107
0
  • வயலில் தழை பயிருக்கு உரம்
  • சோறு தின்று வெற்றிலைப்பாக்கு போட்டுக்கொண்டால் உடம்புக்கு வலிமை -- 108
0
  • நெருப்பையும், நீரையும் நலம் தரும் வழியில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். -- 109
0
  • நன்மைக்குச் சுவர்க்கம்
  • தீமைக்கு நரகம்
  • இவை இந்திரசால வித்தை -- 110

அருணந்தி சிவாச்சாரியார் இயற்றிய சிவஞான சித்தியார் சுபக்கம்  - 328 படல்கள் --- சிவஞான சித்தியார் மூலம் --- இப்பதிவில் பிரமாணவியல்,  இரண்டாஞ் சூத்திரம் பாடல் 110 முடிய   

No comments:

Post a Comment