Pages
▼
இறைவன் ஒரு கருவி அல்லன் God is not a tool.
சிவன்
- உலகெலாம் ஆனான்
- உலகத்தின் வேறு ஆனான்
- உலகத்துடன் ஒளியாய் ஓங்கினான்
- அலகிலா உயிர்கள் கன்மத்து ஆணையில் நகர்ந்து செல்ல ஆளும் தலைவனாய் இருக்கிறான்.
- அவற்றின் தன்மை தனக்கு எய்தாத அமலனாய் இருக்கிறான். --91
0
- மறைகள் அவனை ஒன்று என்று சொல்கின்றன.
- உயிர்களுடன் ஒன்றி இருக்கிறான்.
- அகர ஒலி அனைத்து ஒலிகளிலும் சேர்ந்திருப்பது போல் இருக்கிறான். -- 92
0
- கருவி பயன்படுத்தும்போது உயிர் பெறுவது போல், உயிருடன் மருவியும், மருவாமலும் இருக்கிறான்.
- அவன் கருவி அல்லன் -- 93
0
- உயிர்கள் இருவினை இன்ப துன்பத்தில் வினைப்பயனோடு மறுமையில் பிறந்து இறந்து வாழச் செய்கிறான். -- 94
0
- மலரில் மணம் வருகிறது
- தீயில் வெம்மை வருகிறது
- இப்படி வினைப்பயன் உயிரோடு ஒட்டிக்கொண்டிருக்கிறது. -- 95
0
- அசித்து அறிவில்லாப் பொருள்
- அறிவு என்பது உணர்வு
- அசித்துக்கு இன்ப துன்பங்கள் இல்லை. -- 96
0
- செய்தி என்பது முன் பிறவியில் செய்த வினைப்பயன்.
- இம்மையில் பொருளை ஈட்டி இம்மையிலேயே சிலர் இன்பம் துய்ப்பர்
- நல்வினைச் செய்தி உள்ளவர் இம்மையில் பொருள் ஈட்டாமலையே இன்புறுவர். -- 97
0
- பொருளை ஈட்டும்போது வினைப்பயன் சோம்பலை உண்டாக்கும்.
- பொருளை ஈட்டாமல், முன்னோரால் செல்வம் பெற்றவர் ‘கொடுத்துவைத்தவர்’. நல்வினைப்பயன் பெற்றவர். -- 98
0
- செல்வப் பேறு
- துய்க்கும் இன்பம்
- செல்வ இழப்பு
- பிணி
- மூப்பில் தளர்வு
- சாவில் துன்பம்
- ஆறும்
- கன்ம வினையால் வந்து சேரும். -- 99
0
- வித்தில் மரம். மரத்தில் வித்து. தோன்றுவது போல் வினைப்பயன் விளையும். -- 100
No comments:
Post a Comment