Pages

Sunday, 12 April 2026

இறைவன் நம் அறிவில் இருப்பவன் God resides within our intellect.

ஆறாஞ் சூத்திரம்   

  • சிவன் அனைவரும் அறியக்கூடிய தித்து அல்லாத அசித்துப் பொருளா, அல்லது அறிந்துகொள்ள முடியாத சித்துப் பொருளா?
  • இவை இரண்டும் இன்றி சித்தும் சத்துமாய் விளங்கும் பொருள். -- 240
0
  • அறிவானது ஒருவன் எய்தால் செயல்படும் வில் போன்றது. 
  • அறிவு மும்மலங்கள் உள்ளதாகவும், இல்லாததாயும் விளங்கும். -- 241
0
  • மண்ணக வாழ்வு, விண்ணக வாழ்வு ஆகியவற்றை உலகிலுள்ள எண்ணற்ற பூத பேத யோணிக்கள் இந்திரசாலக் கனாவாகக் காணுமாறு சிவன் அசத்துகிறான். -- 242
0
  • சத்து உணர முடியாத பொருள் என்று சொல்வதில் ஒருபயனும் இல்லை. 
  • சத்து நம்மிடம் இருக்கிறது. 
  • அது தன் ஆற்றலால் நம்மை வாழ்விக்கிறது. -- 243
0
  • சத்து என்பது தத்ததுவம்
  • அசத்து என்பது அசத்துமம்
  • உண்டோ இல்லையோ எனல் வேண்டாம்  
  • மனத்தில் நினைப்பதெல்லாம் சித்து
  • மனம் தீர்மானிப்பதெல்லாம் அசத்து -- 244
0
  • அறிந்த பொருள் அசித்து
  • அறிவுக்கு வராத பொருள் சத்து
  • என்றால் 
  • அதனை அறிந்தவன் நம்மினின்று வேறு ஆகமாட்டான். 
  • அறிவருள் உருவில் நம்மிடமே இருப்பவன் ஆவான். -- 245
0
  • மனத்தில் கற்பனை செய்து பாவிப்பது பாவம் (பாவச்செயல்)
  • பாவகத்தைக் கடந்தால் பாவம். 
  • பாவம், பாவனை இரண்டும் கடந்து பாவிக்கப்படுவதுதான் பரம்பொருள்.
  • அது பரன் அருள். -- 246
0
  • இறைவன் நமக்கு அன்னியன் அல்லன். 
  • உள்ளம் உணர உணர்த்துபவன் -- 247
0
  • நம் அறிவில் நிற்பவன்
  • *யான்* என்னும் அறிவில் அவனைக் காணமுடியாது. -- 247
0
  • *ஒன்று* என்று அவனை நம் அறிவு நினைக்கிறது. -- 248
0

அருணந்தி சிவாச்சாரியார் இயற்றிய சிவஞான சித்தியார் சுபக்கம்  - 328 படல்கள் --- சிவஞான சித்தியார் மூலம் --- இப்பதிவில்  இலக்கணவியல் ஆறாஞ் சூத்திரம் --- பாடல் 248 முடிய   

No comments:

Post a Comment