Pages

Sunday, 19 April 2026

இறைவனைப் பாவிக்காதே - Do not objectify God.

நினைப்புப் பேயே
நினைப்பே
கேள்

86
நாதாந்த உண்மையிலே – அகப்பேய் – நாடாதே சொன்னேனே
மீதான சூதானம் – அகப்பேய் – மெய்யென்று நம்பாதே
  • நாதாந்தம் உண்மை
  • என்றாலும் அதனைத் தேடிக்கொண்டிருக்காதே
  • அது மேலே இருக்கும் சூது
  • உண்மை என்று நம்பி நாதாந்த விளையாடு விளையாடாதே
87
ஒன்றோடு ஒன்று கூடில் – அகப்பேய் – ஒன்றுங் கெடுங்காணே
நின்ற பரசிவமும் – அகப்பேய் – நில்லாது கண்டாயே
  • ஒன்றோடு ஒன்று சேர்ந்தால் தனித்தன்மை கெட்டுப்போகும். 
  • நினைவில் பரமசிவம் நிற்காது
88
தோன்றும் வினைகளெலாம் – அகப்பேய் – சூனியங் கண்டாயே
தோன்றாமல் தோன்றிவிடும் – அகப்பேய் – சுத்த வெளிதனிலே
  • சுத்த வெளியில் செய்யும் செயல் சூனியமாய் மறையும் 
89
பொய்யென்று சொல்லாதே – அகப்பேய் – போக்கு வரத்துதானே
மெய்யென்று சொன்னக்கால் – அகப்பேய் – வீடு பெறலாமே
  • இறை உடலுயிரில் வந்து போகிறது
  • இதை மெய் என்று நம்பினால் அது வீடுபேறு
  • The Divine comes and goes within the body and soul;
  • If one believes this to be the Truth, that is Liberation.
90
வேதம் ஓதாதே – அகப்பேய் – மெய் கண்டோம் என்னாதே
பாதம் நம்பாதே – அகப்பேய் – பாவித்துப் பாராதே
  • வேதம் ஓதாதே
  • மெய்யறிவு பெற்றோம் என்று நினைக்காதே
  • இறைவனடிகளை நம்பாதே
  • இறைவனைப் பாவிக்காதே
0
அகப்பேய்ச் சித்தர் பாடல்கள் 
அகம் என்னும் தன் நினைவைப் 
பேய்ப்பெண்ணாக உருவகப்படுத்திக்கொண்டு, 
அவளை விளித்துக் கூறும் அறிவுரையாக,
பிறருக்குக் கூறும்
விளையாட்டுக் கண்ணி - பாடல் -- 90 / 90

முற்றும்

No comments:

Post a Comment