Pages

Monday, 6 April 2026

சிவஞான சித்தியார் - நாராயணன் மாயம்

திருமால் நாராயணனை முழுமுதல் கடவுள் எனக் கொண்டு வழிபடும் கோட்பாடு பாஞ்சராத்திரி எனப்படும். 

பர, வியூக, விபவ, அந்தர்யாமி, அர்ச்ச என்னும் ஐந்து விதமான வடிவங்களில் நாராயணன் அருள் புரிவதாகக் கொள்ளப்படுவதால் இது பாஞ்சராத்திரி என வழங்கப்படுகிறது. 
  1. பரம் - உயர்நிலை
  2. வியூகம் - உத்தி
  3. விபவம் - அவதாரம் என்னும் தோற்றம் 
  4. அந்தர்யாமி - அனைத்திலும் உள்ளிருத்தல்
  5. அர்ச்சம் - கோயிலில் சிலை
ஆகியவை பஞ்சராத்திரி நிலைகள்

பாஞ்சராத்திரி மதம் 
நாராயணனின் ஐந்திறக் கோட்பாடு
  1. ஆதி அருவம்
  2. அகண்ட பூரணம்
  3. ஞான சோதி
  4. மாயன் 
  5. கருநிறத்தில் பாற்கடலில் பாம்பணையில் துயிலல் 
இவை பாஞ்சாத்திரி இருப்புநிலைகள். -- 264

உந்தியில் அயனை ஈன்று உலகைப் படைக்கச் செய்தான். 
உலகை அழிக்க அரனைத் தந்தான். 
இப்படிச் செயல்-தலைவனாக மாயன் விளங்குகிறான்.  -- 265

  1. மீன்
  2. ஆமை
  3. பன்றி
  4. நரசிங்கம்
  5. வாமனன்
  6. சீத்தாராமன்
  7. பரசுராமன்
  8. பலராமன்
  9. கண்ணன்
  10. கல்கி
தோற்றம் கொண்டு மாயம் செய்தான். -- 266

  1. மீனாய் கடலைக் கலக்கினான்
  2. பாற்கடலைக் கடையும்போது ஆமை உருவில் மலையைத் தாங்கினான். 
  3. பன்றி உருவில் பாதாள உலகம் வரை  அகழ்ந்தான்
  4. இரணியன் உடலைப் பிளந்தான். 
  5. வாமனனாக உலகை அளந்தான். 
  6. பரசுராமன் தன் கோடாரியால் மன்னர்களைக் கொன்றான்
  7. பலராமன் கலப்பையால் நிலத்தை உழுது உலகைப் பேணினான். 
  8. கண்ணனாக கம்சனைக் கொன்றான்; பாரதப்போரை உண்டாக்கி முடித்தான்
  9. சீத்தாராமனாக இராவணனைக் கொன்றான்
  10. குதிரையாக வரப்போகிறான். 
இவை நாராயணன் மாயங்கள். -- 267

பொய்கையில் முதலை வாயில் அகப்பட்ட யானையைக் காத்தான். கொன்ற முதலைக்கு வீடுபேறு அளித்தான். -- 268

கடலைக் கடையச் செய்து பொங்கி வந்த அமுதத்தைத் தேவர்களுக்கு ஊட்டினான். கொலை செய்யும் அசுரர்களைக் கொன்றான். -- 269

மாயை காட்டி நப்பின்னையை மணந்தான். -- 270

நாராயணனின் ஐந்திறக் கோட்பாடு 
பாஞ்சராத்திரி மதத்துக்கு 
மாறுபட்ட கருத்துகள்

ஆதி என்றால் அந்தம் இருக்குமல்லவா?
இறைவனைக் குறையற்றவன் என்றல்லவா மறை கூறுகிறது.
ஞானசோதி மாயம் செய்யுமா?
பிறவியில் தீதின்மை சாத்தியமா? -- 271

இலங்கைப் போரில் மயக்கமுற்று வீழ்ந்தானே -- 272

வேள்வியில் தக்கன் கொடுக்கும் பலியுணவை வாங்கித் தின்னச் சென்றானே -- 273

மறைநீதி உலகின் இயற்கை.
இந்த வேதநூலை மாயன் சொன்னான் என்கிறாய். 
கல்லால மரத்தடியில் சிவன் மறைநீதி சொன்னான் என்கிறார்களே. -- 274

பிரமனைப் பெற்றான் என்கிறாய். 
சிவன் மகன் அந்தப் பிரனின் ஒரு தலையைக் கிள்ளினானே. -- 275

தாய் வயிற்றில் பிள்ளைகள் பிறப்பது போலப் பிறந்தானே. -- 276

நாரணன் சிவனைத் தாக்க யானை ஒன்றை அனுப்பியபோது, சிவன் அந்த யானையைக் கொன்று அதன் தோலைப் போர்த்திக்கொண்டானே. -- 277

நாரணன் அழிப்புத் தொழில் செய்யச் சிவனை ஏவினான் என்றாய். 
அழிப்பவன் ஆக்கமாட்டானா -- 278

சிவனிடம் பெற்ற வரத்தால், சலந்தரன் நாரணனை வென்றான். சலந்தரனைச் சிவன் கொன்றான். -- 279

மீன் உருவம் கொண்டு வாரி நீர் அனைத்தும் உண்டான்.
உலகை அழிப்பேன் என்று ஆலங்கட்டி மழை பொழிந்த இந்திரனை மலையைக் குடையாகப் பிடித்து உலகைக் காத்தான். -- 280

பாற்கடலைக் கடைய ஆமை மத்தாய் இருந்து மேருமலையைத் தாங்கினான். -- 281

பன்றி உருவில் தன் பல்கொம்பால் உலகமெல்லாம் உழுதான். -- 282

இரணியன் தூணைப் பிளந்தான். -- 283

மூன்றடி மண் தானம் பெற்று மூவுலகை அளந்து மாபலியை ஈனமாக்கினான். -- 284 

மாய மானைக் கொன்றான் --- 285

கோடாரியால் அரசர் தலைகளை வெட்டினான். -- 286

வாசுதேவருக்கு மகனாகப் பிறந்தான். -- 287

பரி உருவில் (கல்கி) வருவேன் என்றான். -- 288

ஆதிமூலம் யானைக்கு உதவினான். -- 289

வணங்குவோருக்கு இன்று நீ எம்பெருமான். -- 290

உலகை உண்டான். -- 291

நஞ்சுண்ட நாயகன் தன் மகன் குமரனால் அரியை அஞ்சி ஓடும்படிச் செய்தான். -- 292

கீதை நூல் சொன்னான். -- 293

மாயை செய்த மாயன் பதிபசுபாசம் ஆகமாட்டான். -- 294

பாசத்தை விட்டுப் பசுக்கள் பதியை அடைவதை இவன் மாயை மயக்குகிறது. -- 295 

அழல் உருவாய் நின்ற அரனை அரியால் காணமுடியவில்லை. -- 296

ததீசி முனிவரின் முதுகெலும்பை படையாக ஆக்கிக் கொண்டு அசுரரை வெல்ல நாரணன் தேவர்களுக்குத் தந்திரம் சொல்லிக் கொடுத்தான். -- 297

துர்வாச முனிவர் திருமால் மார்பை மிதித்தார். -- 298

மும்மூர்த்திகளில் சிறந்தவர் திருமாலே என்று பிருகு முனிவரால் தன்னை உணர்த்திக்கொண்டார். -- 299

பிருகு முனிவரால் நாரணன் பெற்ற சாபத்தைச் சிவன் போக்கினார். -- 300

பிருகு முனிவர் சாபத்தால் நாரணன் பிறந்திறந்து வாழ்கிறான். -- 301

சிவஞானசித்தியார் பரபக்கம் முற்றிற்று  

அருணந்தி சிவாச்சாரியார் இயற்றிய சிவஞான சித்தியார் பரபக்கம்  - சிவஞான சித்தியார் மூலம் பாடல் 301 முடிய. 

No comments:

Post a Comment