Pages

Tuesday, 7 April 2026

எண்ணும் உருவில் இறைவன்

காப்பு

ஒருகோட்டன் 
இருசெவியன் 
மும்மதத்தன்   
நால்வாய் ஐங்கரத்தன்
ஆறுதல்  தரும் கோட்டத்தில் பிறையும் இதழியும் தாழ்சடையில் சூடிக்கொண்டிருப்பவன் தரும் ஒரு வாரணம். 
அவன் தாள்கள் அன்பொடும் வணங்கி 
ஒவாதே இரவுபகல் உணர்வோர் அயன் மால் அருளைப் பெறுவர். -- 1

பாயிரம்   

ஆறு வகைச் சமயத்தவர்க்கும் அவரவர் எண்ணப்படி வெவ்வேறு பார்வையில் இறைவன் தோன்றுவான். அவன் வேத ஆகமலங்கள் காட்டும் கருத்தைக் கடந்தவன். அறிவில் அவரவர் தாய்தந்தையராக அருள் தருபவன். அவனை நினைக்கின்றேன். -- 2

என் பிறவியைக் கடக்கும் மருந்தாக, திருவெண்ணெய் நல்லூரில் வாழும் மெய்கண்டான் இயற்றிய சிவஞான போதம் நூலை நினைக்கிறேன். -- 3

வீடு பெற விரும்பும் தொண்டர்களை வணங்கி, சில சொல்கிறேன். -- 4

மறை, அயன், மால், மனம், வாக்கு - எல்லாவற்றிலும் நிறைந்திருக்கும் இறைவனைப் பற்றிச் சொல்ல விரும்பும் என் ஆசை நிறைகுணம் கொண்டவர்க்கு நகைப்பை விளைவிக்கும். -- 5

அறிவின் ஆக்கமே மறை என்னும் வேதம். இதனைக் படித்தால் சிவஞானம் பெறலாம். மனமயக்கம் நீங்கும். பிறவி-இருள் நீங்கும். -- 6

அருணந்தி சிவாச்சாரியார் இயற்றிய சிவஞான சித்தியார் சுபக்கம்  - 328 படல்கள் --- சிவஞான சித்தியார் மூலம் --- காப்பு 

No comments:

Post a Comment