Pages

Wednesday, 8 April 2026

இன்பமும் துன்பமும் அறிவின் அலைகள்

அளவை   
  1. காண்டல்
  2. கருதல்
  3. உரை
  4. அபாவம் (இல்லாமை)
  5. பொருள்
  6. ஒப்பு
என ஆறு வகை. 

மேலும் 
  1. ஒழிபு
  2. உண்மை
  3. ஐதிகம் (முன்னோர் வழி நம்பிக்கை)
  4. இயல்பு
என நான்கு வகை.

இவை
  1. காண்டல்
  2. கருதல்
  3. உரை
என்னும் மூன்றில் அடங்கும். -- 7

காட்சி என்பது ஐயமின்றித் தெளிவுபடுத்திக்கொள்ளல்
அனுமானம் (தெரிந்ததைக் கொண்டு தெரியாததை ஊகித்தல்) -- 8

ஐயம் (இதுவா அதுவா என்று மனம் குழம்புதல்) -- 9

  1. தன் அனுமானம்
  2. பிறர் அனுமானம்
  3. இருபாலாருக்கும் ஒத்த அனுமானம்
என அனுமானம் மூன்று வகை. -- 10

  1. பொது
  2. இயற்கை
என அனுமானம் இரண்டு வகை. -- 11

அனுமானமானது
  • உயிருணர்வு
  • ஒளி
  • ஞானம்
ஆகியவற்றில் தோன்றும். -- 12

இன்ப, துன்பம் அறிவின் அலைகள். -- 13

தனக்காகவும், பிறருக்காகவும் அனுமானம் தோன்றும்.. -- 14

அருணந்தி சிவாச்சாரியார் இயற்றிய சிவஞான சித்தியார் சுபக்கம்  - 328 படல்கள் --- சிவஞான சித்தியார் மூலம் --- இப்பதிவில் பாடல் 14 முடிய 


No comments:

Post a Comment