காயம் என்பது உடல்.
உடல் பிக்கும்போது அதில் ஆன்மா இருக்கும்.
ஆன்மா என்பது உயிர்.
இதனைச் சூக்கும உடல் என்பர்.
இந்தச் சூக்கும உடல் ஓர் எண்புரிக் கயிறு.
எண்புரி என்பது எட்டு தத்துவங்கள்.
- சுவை
- ஒளி
- ஊறு
- ஓசை
- நாற்றம்
- அறிவு என்னும் விரிவு
- மனம் என்னும் இருப்பு (சுருக்கம்)
- காலம் என்னும் உண்மை (இயக்கம்)
இவை எட்டும் உருவம் கொண்ட உடலை இயக்க உதவும் அருவ ஆற்றல்கள்.
இவற்றைப் புரியட்டகம் என்பர்.
உடல் உணவை உண்ணும்
உயிர் காற்றை உண்ணும்

No comments:
Post a Comment