ஆசீவகம் என்பது சமண மதத்தில் ஒரு பிரிவு. இது ஊழ்வினைத் தாக்கத்தை மையமாகக் கொண்டது.
➕
ஆசீவகன் மதம்
ஆசீவகன் தன் தலைமயிரைத் தானே பிடுங்கிக்கொள்வான். -165
நிலம், நீர், தீ, காற்று, உயிர் - ஆகியவை ஐவகை அணுக்கள். -166
நிலமும் நீரும் தாழும். தீயும் காற்றும் உயரும். இது பொருளின் தன்மை. -167
இவை நான்கும் ஒன்று கெட்டு மற்றொன்றாக மாறுவது இல்லை. -168
➕
இவை விரியும், நீளும், குறுகும், குவியும், ஊன்றும். ஊடே பாயும். -169
இவை நான்கும் கன்மத்தால் தோன்றியவை. மனிதனும் தேவரும் இதனை அறிவர். -170
நிலம் > நீர் > தீ > காற்று - இது வரிசைமுறை. -171
வெண்மை, பொன்மை, செம்மை, நீலம், கழிவெண்மை, பச்சை - என்பன 6 வண்ணம். பிற இவற்றின் கலவை. -172
➕
பேரிழவு, இடையூறு, இன்பம், வேறுபடல், நாடுதல், செல்லல், மூப்பு, சாவு - ஆகிய எட்டும் ஊழில் விளையும். -173
செய்த புண்ணியம், பாவம் ஆகியவற்றின் விளைவே ஊழ். -174
➕
ஆசீவகன் மதத்தை சிவஞான சித்தன் மறுத்தல்
வீடு என்பது வாராநெறி. அதனைப் பெற்றபின் ஊழ் என்ன செய்யும்? -175
மண்டலர், செம்போதகர் என்று சமணத்தில் இருபால் ஆசிரியர்கள் உண்டு. -176
உயிர் உடலில் கலந்திருப்பது ஒட்டுக் கலப்பு. -177
➕
அணுக்கள் கீழும் மேலும் செல்பவை என்றால், அவை நமக்குள் ஒட்டுவது எப்படி? -178
ஒட்டும் அணுக்கள் வேறு என்றால் அது நகைப்புக்கிடம். -179
கூடா அணுவைக் கூட்டி வைக்கும் ஒருவன் உண்டு அன்றோ? -180
➕
அருணந்தி சிவாச்சாரியார் இயற்றிய சிவஞான சித்தியார் பரபக்கம் - சிவஞான சித்தியார் மூலம் சிவஞான சித்தியார் 165 - 180
No comments:
Post a Comment