நூல்கண்டு போன்று தன்னைத் தன் சுற்றத்தாரோடு சுற்றிக்கொண்டு வாழ்வது நூல்கண்டுநெறி --- கண்டநெறி --- கண்டக் கோட்பாடு.
சுற்றப் பற்று இல்லாமல் வாழ்வது நிகண்டம்.
இப்படி வாழும் கோட்பாட்டை விளக்குவது நிகண்ட வாதம்.
இது சமண மதக் கோட்பாடு.
🍎
நிகண்டவாதி மதம்
🍎
மணக்கும் அசோகு நிழலில் இருந்துகொண்டு மறை புகன்றவன். நீதிநெறிகளைக் கடைப்பிடித்துக்கொண்டு வாழ்பவன். இல்லற வாழ்வின் ஆசை அகன்றவன். பாசம் இல்லாத் துறவறம் மேற்கொண்டவன். பிறர் இல்லங்களில் உணவு வாங்கி உண்பவன். படுக்கும் பாய், துடைக்கும் மயில்வீலி ஆகியவற்றை வைத்துக்கொண்டிருப்பவன். இவன் நிகண்டவாதி. -143
அருகன் எண்குணம் கொண்டவன். அவனை வானவர் வணங்குவர். அவன் எங்களுக்கு இறைவன். -144
அருகன் கருவி ஏதும் இல்லாதவன். முக்காலமும் உணர்ந்தவன். குற்றமில்லாதவன். -145
🍎
பசி, தாகம், மோகம் இல்லாதவன். உறக்கத்தைக் கைவிட்டவன். மாறுபட்டவனுக்கும் அருள்பவன். -146
பத்து நெறிகளைக் கடைப்பிடிப்பவன். -147
கற்ற நெறியில் நிற்பவன். -148
ஐம்புல ஆசைகளை விட்டவன். -149
🍎
பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால்கவர்ச்சி, உயர்வு-தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் என்னும் அறுவகைச் செயல் கட்டுப்பாட்டிலிருந்து விலகியவன். -150
🍎
நிகண்டவாதி மதக் கோட்பாடுகளை, சிவஞானத்தில் சித்தி பெற்றவன் மறுத்துக் கூறுகிறான்.
🍎
அருகன் அறத்தில் மன்னியவன் என்றால், அனந்த ஞானம் அவனுக்கு எப்படி வரும்? -151
அவன் மற்றவர்களை அறநெறியில் குளிக்கச் செய்பவன் என்றால், அது ஒரு அவத்தை (மெய்ப்பாடு) அல்லவா? -152
அருகன் செயலாற்றாக் கருவி என்றால், அவன் அநாதி ஆவது எப்படி? -153
உயிர் உடம்பை விரும்பும். மன்னன் மக்களைக் காப்பது போல் அருகள் அனைத்துயினங்களையும் விரும்பிதானே காக்கிறான். -154
🍎
ஊமன் ஊமனுக்குச் சொல்வது போல் பேசுகிறாய். -155
இன்ப நிலையில் இருப்பவனுக்கு, மற்றவர்களின் துன்பநிலை தெரியுமா? -156
நீர் நிறைந்த குடம் போன்றவன் அருகன் என்றால், நீர் குறையும்போது அவன் நிலை என்ன? -157
தன்மாத்திகாயம், தன்மம் என்னும் இரண்டு நிலை பற்றிக் கண்டநூல் கூறுகிறது. இவை பூவும் வண்டும் போன்றவை. -158
🍎
பாவ புண்ணியங்களால் நிரையமும் வீடும் பெறுதலானது வில்லும் அம்பும் போன்றவை. ஒன்று இல்லாமல் மற்றறொன்றால் செயல் இல்லை. -159
உடம்பு அணுவின் இயக்கம் - என்பது நிகண்டவாதி கோட்பாடு. -160
அறுகுணச் செயல் ஊழின் தாக்கம் -161
மூச்சைப் பக்குவப் படுத்தி அறுகுணங்களைச் சீரமைக்கலாம். -162
🍎
நீர் வறண்டு போனால் பூனை மீன் தின்னும். அதுபோல, கன்மம் நிச்சயமற்றது. -163
குடத்தில் நீர் கொண்டு வருவது போல, சிவன் என்னும் குடத்தில், அவன் அருள் என்னும் நீரைக் கொண்டுவரலாம். -164
🍎
அருணந்தி சிவாச்சாரியார் இயற்றிய சிவஞான சித்தியார் பரபக்கம் - சிவஞான சித்தியார் மூலம் சிவஞான சித்தியார் 164
No comments:
Post a Comment