குரு நமசிவாயர் பசியால் வாடிய போதல்லாம் உமையவளைச் சோறு கொண்டுவா என்று பாடி உணவு பெற்றதாக, கூறப்படுகிறது.
வெண்பாக்கள்
அண்ணா மலையார் அகத்துக்கு இனியாளே
உண்ணாமுலையே உமையாளே - நண்ணா
நினைதோறும் போற்றி செய நின் அடியார் உண்ண
மனைதோறும் சோறு கோண்டு வா
- அண்ணாமலை உண்ணா முலையாளே!
- அகத்துக்கு இனியவளே
- உன் அடியார்க்குச் சோறு கொண்டுவா
தாய் இருக்கப் பிள்ளை தளருமோ தாரணியில்
நீ இருக நான் தளரல் நீதியோ - வேய் இருக்கும்
தோளியே விண்ணோர் துதிக்கும் திருமுத்து
வாளியே சோறு கொண்டு வா
- தாய் இருக்கும்போது பிள்ளை பசியோடு இருக்கலாமோ
- சோறு கொண்டு வா
மின்னும்படி வந்த மேக களத்து ஈசருடன்
மன்னும் திருமுத்து வாளியே - பொன்னின்
கலையாளே தாயே என் கல் மனத்தே நின்ற
மலையாளே சோறு கொண்டு வா
- ஈசனுடன் இருக்கும் பின்னலே
- பொன்னின் கலையே
- என் கல் மனத்தில் இருக்கும் மலைமகளே
- சோறு கொண்டு வா
நன்றி புனையும் பெரியநாயகி எனும் கிழத்தி
என்றும் சிவன்பால் இடக்கிழத்தி - நின்ற
நிலக்கிழத்தி மேனி முழு நீலக் கிழத்தி
மலைக்கிழத்தி சோறு கொண்டுவா
- பெரியநாயகி
- சிவனின் இடக்கிழத்தி
- நிலக் கிழத்தி
- நீலக் கிழத்தி
- மலைப் கிழத்தி
- சோறு கொண்டு வா
முத்த நதி சூழும் முதுகுன்றத்து உறைவாளே
பத்தர் பணியும் பதத்தாளே - அத்தர்
இடத்தாளே மூவா முலை மேலே ஊரும்
வடத்தாளே சோறு கொண்டு வா
- மணிமுத்தாறு பாயும் முதுகுன்றத்தவளே
- பத்தர் தொழும் பதம் கொண்டவளே
- சோறு கொண்டு வா
ஊன் பயிலும் காயம் உலராமல் உன்றனது
வான் பயிலும் பொன்னடியை வாழ்த்துவேன் - தேன் பயிலும்
சொல்லியல் நல்லார் துதிக்கும் சிவகாம
வல்லியே சோறு கொண்டு வா.
- உன் பொன்னடியை வாழ்த்துவேன்
- சோறு கொண்டு வா
கொண்டுவந்தேன் சோறு குகை நமச்சிவாயரது
தொண்டர் அடி சுகிக்கவே - பண்டு உகந்த
பேய்ச்சி முலை உண்ட பெருமாளுடன் பிறந்த
தாய்ச்சி சிவகாமி நான்
- குகை நமச்சிவாயர் தொண்டன் சுகிக்க சோறு கொண்டுவந்தேன்
- நான் சிவகாமி
- பேய்ச்சி முலை உண்டு அவளைக் கொன்ற பெருமாளுடன் பிறந்தவள் நான்
குகை நமசிவாய தேவரின் மாணாக்கர் குருநமசியர். இவர் பாடிய நூல் பரமராசிய மாலை. இது 100 பாடல் கொண்டது. அவற்றில் சில:
மு அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, \16 ஆம் நூற்றாண்டு, பாகம் 3, பக்கம் 166
No comments:
Post a Comment