அம்பலவா ஓர்கால் ஆடினால் தாழ்வோமோ
உம்பரெலாம் கண்டது எனக்கு ஒப்பாமொ - சம்புவே
வெற்றிக் பதஞ்சலிக்கும் வெம்புலிக்கும் தித்தியென
ஒத்துப் பதம் சலிக்குமோ
- பதஞ்சலி முனிவர், புலிக்கால் முனிவர், தேவர்கள் காணும்படி நீ ஆடினாய் என்கின்றனர்.
- நான் காணும்படி ஆடக்கூடாதா என வேண்டினார்
- சிவன் அவர் காணும்படி ஆடினார்
தூக்கிய கால் நோவாதோ துட்டன் முயலகன் மேல்
தாக்கிய கால் தானும் சலியாதோ - வாக்கா
தினவரதா தில்லைத் திருத்தாண்டவா நீ
அனவரதம் கூத்தாடினால்
- திருத் தாண்டவா! எப்போதும் ஆடிக்கொண்டிருந்தால் கால் வலிக்காதா?
- ஆட்டம் உனக்குச் சலிக்காதா?
நகுதந்தா தாதகி என் நாடகத்திற்கு ஏற்ற
தகுதித் தாளும் சிலம்பும் தானாம் - மகுதப்பா
பாரே இனி அமையும் பொன் அம்பலத்தால்
வாரே திருத்தாண்டவம்
- தாதகி (ஆத்தி) சிரிக்க ஆடுகிறாய்
- சிலம்பு ஒலிக்கிறது
- இது அம்பலத்தில் நீ ஆடும் தாண்டவம்.
வேடன் எச்சில் மிக விரும்பும் வேளவன் தன் மேனி பொன்ற
வாட நித்தம் காளியொடு அம்பலவர் சன்னிதிக்குக்
கோடிலக்கம் கவிபாடும் குரு நமசிவாயர் அருள்
பாடல் மெச்சி அம்பலர் பாதகச்சை அடியதே
- நீ கண்ணப்ப வேடன் எச்சிலை விரும்புவன்
- காமவேளை எரித்தவன்
- அடியேன் குருநமச்சிவான் பாடலை விரும்புபவன்
வந்தீச்சுர வருடம் வைகாசி தேதி நவம்
இந்து நால் நாழிகை ஏழரை மேல் - வந்த குரு
தானாம் அருணகிரி தாணு சிவலிங்கத்துள்
ஆனான் நமச்சிவாயன்.
- ஈஸ்வர வருசம் வைகாசி மாதம் 9 ஆம் நாள் இவர் இலிங்கத்துக்குள் ஐக்கியமானார்.
குகை நமசிவாய தேவரின் மாணாக்கர் குருநமசியர். இவர் பாடிய நூல் பரமராசிய மாலை. இது 100 பாடல் கொண்டது. அவற்றில் சில:
வரலாற்று அற்புதங்கள் \ மு அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, \16 ஆம் நூற்றாண்டு, பாகம் 3, பக்கம் 170
![]() |
| தாதகி / ஆத்தி |

No comments:
Post a Comment