வடமொழி மரபை விட்டுவிட்டுத் தமிழில் உள்ள புராணங்களை நோக்குவோமானால், தமிழில் எண்ணற்ற பெருநூல்களும், சிறுநூல்களும் உள்ளன.
இவை கூறும் பொருளையும், நூலின் அமைப்பையும் கொண்டு பார்த்தால் அவற்றில் ஆறு வகையான பாகுபாடுகள் இருப்பதைக் காணமுடியும்.
- மகாபுராணம்
- இதிகாசம்
- சிவபராக்கிரமம், சிவதருமம்
- தலபுராணம்
- அடியார் வரலாறும் பிற வரலாறும்
- சாதிப் பெருமை
இவற்றைச் சில எடுத்துக்காட்டுகள் மூலம் விளங்கிக்கொள்ளலாம்.
1
மகாபுராணம்
வடமொழி மகாபுராணத்தை அப்படியே மொழிபெயர்த்தவை இந்த வகையின.
எடுத்துக்காட்டு (அந்தப் புராணம் தோன்றிய நூற்றாண்டு அதன் அருகில் அடைப்புக் குறிக்குள் தரப்பட்டுள்ளன)
சைவத்தில்
- கூர்ம புராணம் (16)
- இலிங்க புராணம் (16)
- மச்ச புராணம் (18)
- வைணவத்தில்
- பாகவதம் 1 (16)
- பாகவதம் 2 (16)
ஆகியவை செய்யுள் வடிவில் உள்ளன.
- சைவ மகாபுணம் (19)
- வைணவ மகாபுராணம் (19)
ஆகியவை உரைநடை வடிவில் உள்ளன
இவற்றில் சிவ விஷ்ணு பராக்கிரமங்களும் சிவதர்மம் சிவபுண்ணியம் போன்றவைகளும் விரவி வருகின்றன.
- சைவ புராண 12 சங்கிதைகளில் வாயுசங்கிதை (16)
- காந்த புராணத்தில் சில பாகங்களாக உள்ள கந்தபுராணம் (14)
- உபதேச காண்டம் (15)
ஆகியவை செய்யுள் வடிவில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
- மார்க்கண்டேய புராணத்தில் சில பாகங்கள் உரைநடையில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
2
இதிகாசம்
- கந்த புராணம் (14)
- பாகவதம் (16)
- விநாயக புராணம் (18)
போன்றவை மகாபுராணத்தின் பகுதியாகவும், காவிய அமைப்போடு தெய்வ வரலாற்றைக் கூறுவனவாகவும் உள்ளன.
3
சிவதர்மம் சிவபுண்ணியம்
வடமொழி புராணத்தின் பகுதி என்பதைக் காட்ட சங்கிதை, கண்டம், காண்டம் என்னும் பெயர் சூட்டப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டு
- உபதேச காண்டம் (15)
- பிரமோத்திர காண்ணடம் (16)
- வாயு சங்கிதை (16)
- காசி காண்டம் (16) முதலானவை
சிவ தருமோத்திரம் என்னும் நூலும் இவ்வகையுள் அடங்கும். இதனை ஆகமம் எனக் கூறுவதும் உண்டு.
4
தலபுராணம்
- நம்பி திருவிளையாடல் (13)
- கோயிற்புராணம் (14)
- அருணாசல புராணம் (16)
- பரஞ்சோதி திருவிளையாடல் (18)
- குற்றால புராணம் (18)
- காஞ்சிப் புராணம் (18)
- தணிகைப் புராணம் (19)
முதலானவை தலபுராணங்கள்.
- ஒரு தலத்தில் எழுந்தருளியுள்ள சிவன் அல்லது திருமால் பெருமை இதில் கூறப்பட்டிருக்ககும்.
- தீர்த்தத்தின் பெருமை
- பூசித்துப் பேறு பெற்றவர் வரலாறு
- கடைப்பிடிக்க வேண்டிய தரும நெறிகள்
- விலக்கத்தக்கனவாகிய அதர்மங்கள்
- நாட்டுச் சிறப்பு
- நகர்ச் சிறப்பு
முதலானவற்றோடு காவிய நயத்துடன் இவை அமைந்திருக்கும்.
- திருவாரில் பிறந்தால் முத்தி
- தில்லையைத் தெரிசிக்க முத்தி
- காசியில் இறக்க முத்தி
- திருவண்ணாமலையை நினைக்க முத்தி
என்றெல்லாம் தலபுராணங்கள் கூறுகின்றன.
மற்றும்
- திருக்குருகூர் மான்மியம் (16)
- கூடல் புராணம் (16)
- திருவேங்கடத் தலபுராணம் (18)
போன்றவையும் பழந்தமிழ்ப் புராணங்கள்.
5
அடியார் வரலாறு கூறும் புராணங்கள்
- பெரியபுராணம் (12)
- சேக்கிழார் புராணம் (14)
- திருவாதவூர் அடிகள் புராணம் (15)
சைவம்
- அரி சமய தீபம் (17)
- வடிவழகிய நம்பி தாசர் பாடிய குரு பரம்பராய பிரபவம் (18)
- திவ்விய சூரி சரிதம் (19)
வைணவம்
- குரு பரம்பராய பிரபாவம் ஆறாயிரப்படி (13),
- மூவாயிரப்படி,
- பன்னீராயிரப்படி
ஆகியவை மணிப்பிரவாள நடையில் தமிழில் தோன்றிய மூல நூல்கள்.. வடமொழியிலிருந்து மொழிபெயர்க்ககப்பட்டவை அல்ல.
20 ஆம் நூற்றாண்டில் பழைய மரபைத் தழுவி, மொழிபெயர்ப்பு அல்லாத புதிய புராணங்கள் பல தோன்றின.
அவற்றுள் அடியார் பற்றிய புராணங்கள்:
- தண்டபாணி சுவாமிகள் பாடிய அருணகிரி நாதர் புராணம்
- வாளூர் சொக்கலிங்கம் பிள்ளை பாடிய சேய்த்தொண்டர் புராணம்
- வாமதேவ முருக பட்டாரகர் பாடிய கச்சியப்ப சிவாசாரியார் புராணம்
- அசலாம்பிகை அம்மை பாடிய இராமலிங்க சுவாமி புராணம்
19 ஆம் நூற்றாண்டில் தோன்றியவை
- பட்டினத்துப் பிள்ளை புராணம்
- சடகோப திவ்ய சரிதம்
இவை செய்யுள் வடிவில் உள்ளன
தண்டபாணி தேசிகர் பாடிய
- புலவர் புராணம்
- அசலாம்மபிகை பாடிய
- திலகர் புராணம்,
- காந்தி புராணம்,
- ஆறுமுக நாவலர் சரித்திரம்
ஆகியவை அடியார் அல்லாதவர் மீது படப்பட்டுள்ளன.
6
சாதிப் பெருமை
17, 18 ஆம் நூற்றாண்டுகளில் சாதிகளை உயர்த்திச் சொல்லிப் பாடுகின்ற சிற்றிலக்கியங்கன் தோன்றியுள்ளன.
- ஈட்டி எழுபது
- செம்பொன் சிலை எழுபது
- வாள் எழுபது
- வைசியப் பள்ளு
- பந்தன் அந்தாதி
- செங்குந்தர் பிள்ளைத்தமிழ்
- செங்குந்தர் புராணம்
- விசுவகர்மர் புராணம்
- சீர்கருணர் புராணம்
- சான்றார் புராணம்
- குலாலர் புராணம்
- வீரநாராயண விசயம்
தமிழ்நாட்டில் சிவாலயங்கள் பல்லாயிரக் கணக்கில் உள்ளன. திருமால் ஆலயங்கள் 200-க்கும் குறைவு.
சைன புராணங்கள்
காந்தி புராணம்
மேருமந்திர புராணம்
ஸ்ரீ புராணம்
போன்றவை பாடல்களாவும்
மு அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு,
16 ஆம் நூற்றாண்டு, முதல் பாகம், முன்னுரை, பக்கம் 17
No comments:
Post a Comment