Pages

Friday, 23 January 2026

மெய்க்கீர்த்தி, சாசனம்

மெய்க்கீர்த்தி 

சோழ மன்னரும், பாண்டிய மன்னரும் 
கோயில் சுவர்களிலும், தனிப் பட்டங்களிலும்
தங்களுடைய கொடைகளைப் பொறித்த காலத்தில், 
அழகு படுத்திய வாசகங்களாக எழுதினார்கள். 

இவற்றில் அரசன் சிறப்பினைச் சொல்லும் பகுதி மெய்க்கீர்த்தி எனப்படும். 

இதனைப் பாட்டியல் நூல்கள் ஒருவகைச் சிற்றிலக்கியமாகவே கூறுகின்றன. 

இதன் வாசகங்களில் 
எதுகை மோனை
உவமைகள்
கலந்திருக்கும். 

இப்படிப்பட்ட மெய்க்கீர்த்திகள் சுமார் 50 உள்ளன.

சாசனம் 

கல்வெட்டுகளைச் சாசனம் என்கிறோம்.
இவற்றிலும் மெய்க்கீர்த்தி போன்ற வாசகங்கள் உள்ளன. 
சுவை மிக்க பாடல்களும் உள்ளன.

மு அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 
12 ஆம் நூற்றாண்டு, முதல் பாகம், பக்கம் 316

No comments:

Post a Comment