8-ஆம் நூற்றாண்டுக்கு முன் உரைநூல்கள் தோன்றவில்லை.
யார் எந்த நூலுக்கு எப்போது உரை எழுதினார்; அவர் எந்த சமயத்தைச் சார்ந்தவர் என்னும் செய்திகளை இங்குக் காணலாம்.
10-ஆம் நூற்றாண்டில்
- சமண மதத்தவரான மணக்குடவர் திருக்குறளுக்கு உரை எழுதினார்.
11-ஆம் நூற்றாண்டில்
- சைவ மதத்தவரான அரும்பத உரைகாரர் சிலப்பதிகாரத்துக்கு உரை எழுதினார்.
- சைவ மதத்தவரான அரும்பத உரைகாரர் சிலப்பதிகாரத்துக்கு உரை எழுதினார்.
- சைவ மதத்தவரான பரிப்பெருமாள் திருக்குறளுக்கு உரை எழுதினார்.
12-ஆம் நூற்றாண்டில்
- சைவ மதத்தவரான பழைய உரைகாரர் புறநானூற்றில் 265 பாடல்களுக்கு உரை எழுதினார்.
- சைவ மதத்தவரான அடியார்க்கு நல்லார் சிலப்பதிகாரத்துக்கு உரை எழுதினார்.
- சைவ மதத்தவரான பழைய உரையாசிரியர் திருக்கோவையாருக்கு உரை எழுதினார்.
13-ஆம் நூற்றாண்டில்
- காலிங்கர் திருக்குறளுக்கு உரை எழுதினார்.
- வைணவ சமயத்தவரானபரிமேலழகர் திருக்குறளுக்கு உரை எழுதினார்.
- பரிபாடல்களுக்கு உரை ஒன்று உண்டு
- சைவ சமயத்தவரான பழைய உரையாசிரியர் திருமுருகாற்றுப்படைக்கு உரை எழுதினார்.
- பழைய உரையாசிரியர் ஐங்குறுநூறு பாடல்களுக்கு உரை எழுதினார்.
- பழைய உரையாசிரியர் அகநாநூறு பாடல்களுக்கு உரை எழுதினார்.
- பழைய உரையாசிரியர் பதிற்றுப்பத்து பாடல்களுக்கு உரை எழுதினார்.
- பதுமனார் என்னும் சைவர் நாலடியாருக்கு உரை எழுதினார்.
- தருமனார் என்னும் சைவர் நாலடியாருக்கு உரை எழுதினார்.
- விளக்க உரைகாரர் நாலடியாருக்கு உரை எழுதினார்.
- சைவ சமயப் பேராசிரியர் திருக்கோவையாருக்கு உரை எழுதினார்.
- பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுக்கு இந்த நூற்றாண்டில் பல உரைகள் தோன்றின.
- சைவர் நச்சினார்க்கினியர் பத்துப்பாட்டு, கலித்தொகை, சிந்தாமணி ஆகிய நூல்களுக்கு உரை எழுதினார்.
- சமண சமய திவாகர வாமன முனிவர் நீலகேசி நூலுக்கு உரை எழுதினார்.
- சைவ சமய பழைய உரையாசிரியர் தக்கயாப் பரணிக்கு உரை எழுதினார்.
- பரிதியார் என்னும் சைவர் திருக்குறளுக்கு உரை எழுதினார்.
மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 12ஆம் நூற்றாண்டு பாகம் 2, பார்க்கர் அச்சகம் பதிப்பு, 1973, பக்கம் 5, 6, 7 அட்டவணை
No comments:
Post a Comment