8-ஆம் நூற்றாண்டுக்கு முன் உரைநூல்கள் தோன்றவில்லை.
நூற்பா வடிவில் இருந்த இலக்கண நூல்களுக்கு உரைநூல்கள் பல தோன்றின.
அவற்றைச் செய்தவர் யார்; எப்போது செய்தார்; செய்தவர் எந்த சமயத்தவர் என்பனவற்றை இங்குக் காணலாம்.
8-ஆம் நூற்றாண்டு
- இறையனார் என்பவரால் எழுதப்பட்ட களவியல் என்னும் நூலுக்கு நக்கீரர் என்னும் சைவர் உரை சொன்னார்.
9-ஆம் நூற்றாண்டு
- தமிழ்நெறி விளக்கம் என்னும் நூலை எழுதியவர் தாமே அந்த நூலுக்கு உரையும் எழுதினார்.
10-ஆம் நூற்றாண்டு
- நீலகண்டனார் என்னும் சைவர் இறையனார் களவியலுக்கு நக்கீரர் செய்த உரையை எழுதிவைத்தார்.
- ஆத்திரேயன் பேராசிரியர் என்னும் சைவர் தொல்காப்பியம் பொதுப்பாயிரம் பகுதிக்கு உரை எழுதினார்.
11-ஆம் நூற்றாண்டு
- யாரோ ஒரு சமணர் யாப்பருங்கலம் என்னும் நூலுக்கு விருத்தியுரை எழுதினார்.
- குணசாகரர் என்னும் சமணர் யாப்பருங்கலக்காரிகை நூலுக்கு உரை எழுதினார்.
- இளம்பூரணர் என்னும் சமணர் தொல்காப்பியம் நூல் முழுமைக்கும் உரை எழுதினார்.
12-ஆம் நூற்றாண்டு
பெருந்தேவனார் என்னும் சைவர் வீர்ரசோழியம் என்னும் நூலுக்கு உரை எழுதினார்.
13-ஆம் நூற்றாண்டு
- உரையாசிரியர் எனக் குறிப்பிடப்படும் ஒருவர் வச்சணந்திமாலை என்னும் நூலுக்கு உரை எழுதினார்.
- பேராசிரியர் எனப் போற்றப்படும் சைவர் தொல்காப்பியம் பொருள்-பால் பகுதிக்கு உரை எழுதினார்.
- இராச பவித்திரப் பல்லவதரையர் என்பவர் அவிநயம் என்னும் நூலுக்கு உரை எழுதினர். அந்த நூலும், உரையும் கிடைக்கவில்லை. சில நூற்பாக்களும் உரையும் கிடைத்துள்ளன.
- சேனாவரையர் என்பவர் தொல்காப்பியம் சொல்லதிகாரம் பகுதிக்கு மட்டும் உரை எழுதினார்.
- நாற்கவிராச நம்பி என்னும் சமணர் நம்பியகப்பொருளுக்கு உரை எழுதினார்.
14-ஆம் நூற்றாண்டு
- மயிலைநாதர் என்னும் சமணர் நன்னூலுக்கு உரை எழுதினார்.
- உரையாசிரியர் எனக் குறிப்பிடப்படும் ஒரு சைவர் களவியல் காரிகை என்னும் நூலுக்கு உரை எழுதினார்.
- நச்சினார்க்கினியார் என்னும் சைவர் தொல்காப்பியம் முழுமைக்கும் உரை எழுதினார்.
15-ஆம் நூற்றாண்டு
- கல்லாடர் என்னும் சைவர் தொல்காப்பியம் செல்லதிகாரம் பகுதிக்கு மட்டும் உரை எழுதினார்.
- பழைய உரையாசிரியர் எனக் குறிப்பிடப்படுபவர் தொல்காப்பியம் செல்லதிகாரம் பகுதிக்கு மட்டும் உரை எழுதினார்.
- தெய்வச்சிலையார் என்பவர் தொல்காப்பியம் செல்லதிகாரம் பகுதிக்கு மட்டும் உரை எழுதினார்.
- சாமுண்டிதேவ நாயகர் என்பவர் புறப்பொருள் வெண்பாமாலை நூலுக்கு உரை எழுதினார்.
- உரையாசிரியர் எனக் குறிப்பிடப்பட்டுள்ள ஒருவர் நேமிநாதம் நூலுக்கு உரை எழுதினார்.
மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 12ஆம் நூற்றாண்டு பாகம் 2, பார்க்கர் அச்சகம் பதிப்பு, 1973, பக்கம் 5, 6, 7 அட்டவணை
No comments:
Post a Comment