Pages

Thursday, 20 November 2025

கூத்து வகை

இந்தப் பகுதி 
அடியார்க்கு நல்லாரின் 
வடமொழிப் புலமைக்கு 
ஓர் எடுத்துக்காட்டு

மாதவி 5 வயதிலிருந்து 12 வயது வரை 7  ஆண்டுகள் கூத்தாடக் கற்றுக்கொண்டாள்.

அக்காலத்தில் ஆடப்பட்ட கூத்துகள் 2 வகை 
  • வசைக்கூத்து - புகழ்க்கூத்து
  • வேத்தியல் - பொதுவியல் 
  • வரிக்கூத்து - வரிச்சாந்திக்கூத்து
  • சாந்திக்கூத்து  - விநோதக்கூத்து
  • ஆரியக்கூத்து - தமிழ்க்கூத்து
  • இயல்புக்கூத்து - தேசிக்கூத்து 
எனப் பல வகை 

இவற்றில் சாந்திக் கூத்து, விநோதக்கூத்து என்னும் இரண்டையும் மாதவி கற்றிருந்தாள். 

1

சாந்திக் கூத்து - தலைவன் இன்பம் ஏந்தி ஆடிய 4 நடம்

2

சொக்கம்  / சுத்தநிருத்தம் / 108 கரணம் கொண்டது

3

மெய் 
  1. தேசி 
  2. வடுகு 
  3. சிங்களம் 
என்று 3 வகை 

மெய்யில் தொழில் உணருமாறு ஆடப்படுவது அகக்கூத்து (அக மார்க்கம்)
 
அகச்சுவையாவன 
  1. இராசதம்
  2. தாமதம்
  3. சாத்விகம்
என 3 வகை

  • "குணத்தின் வழியதாகக் கூத்து எனப்படுமே" - குணநூல்
  • "அகத்து எழு சுவையால் அகம் எனப்படுமே" - சயந்தம்

4

அவிநயக் கூத்து - கதை தழுவாது பாட்டினது பொருளுக்குக் கையால் வல்லபம் செய்து ஆடுவது 

5

நாடகம் (நாடகக் கூத்து) இது கதை தழுவி ஆடப்படுவது 

6

விநோதக் கூத்து என்பது குரவை - இது வரிக்கூத்தின் ஓர் உறுப்பு

  • கலிநடம் - கழைக்கூத்து
  • குடக்கூத்து - மாதவி ஆடிக் காட்டிய 11 ஆடல்
  • கரணம் - படிந்தவாறு ஆடல்
  • நோக்கு - பாரம், நுண்மை, மாயம் காட்டி ஆடுதல்
  • தோற்பாவை - தோலால் பாவை செய்து ஆட்டிக் காட்டுதல்

என 6 வகை
  1. வெறியாட்டு - தெய்வம் ஏறி ஆடும் கூத்து
இதனையும் சேர்த்து 7 வகை என்பர்..
 

மேலும்


  • வென்றிக்கூத்து - மாற்றான் ஒடுக்கமும் மன்னன் உயர்ச்சியும் தோன்ற ஆடுவது
  • வசைக்கூத்து - பழித்துக்காட்டி ஆடும் ஆட்டம் -- வசைக்கூத்து வேத்தியல் பொதுவியல் என 2 வகை.
  • இந்தக் கூத்துகள் தாள இசைக்கேற்ப ஆடப்படும் 
  • விநோதக் கூத்து இவற்றிலிருந்து வேறுபாடு உடையது. வேந்தன், மன்னன் வென்ற போர்க்களத்தில் ஆடப்படுவது. 

விலக்குறுப்பு (விலக்கும் உறுப்புகள்)
  1. பொருள் 
  2. யோனி
  3. விருத்தி
  4. சாந்தி
  5. சுவை
  6. சாதி
  7. குறிப்பு
  8. சத்துவம்
  9. அவிநயம்
  10. சொல்
  11. சொல்வகை
  12. வண்ணம்
  13. வரி
  14. சேதம்
என 14 வகை 

6 வகை நிலை


  1. வைணவம் 
  2. சமநிலை
  3. வைசாகம் 
  4. மண்டலம்
  5. ஆலீடம்
  6. பிரத்தியாலீடம்

5 வகைப் பாதம்


  1. சமநிலை
  2. உற்கடிதம்
  3. சஞ்சாரம்
  4. காஞ்சிதம்
  5. குஞ்சிதம்

அங்கக் கிரியை 16


  1. சரிகை
  2. புரிகை
  3. சமகலி
  4. திரிகை
  5. ஊர்த்துவ கலிகை
  6. பிருட்டகம்
  7. அர்த்த பிருட்டகம்
  8. சுவத்துவம்
  9. உல்லோலம்
  10. குர்த்தனம்
  11. வேட்டனம்
  12. உப வேட்டனம்
  13. தான பத பிராய விருத்தம்
  14. உஷேபணம்
  15. அவஷேபணம்
  16. நிகுஞ்சனம்

வருத்தனை 4


  1. அபவேட்டிதம்
  2. உபவேட்டிதம்
  3. வியாவர்த்திதம்
  4. பராவர்த்திதம்

நிருத்தக்கை 30

  1. சதுரச்சிரம்
  2. உத்துவீதம்
  3. தலமுகம்
  4. சுவத்திகம்
  5. விப்பிதகீர்ணம்
  6. அருத்தரேசிதம்
  7. அராளகடகாமுகம்
  8. ஆவித்துவத்திரம்
  9. சுசீமுகம்
  10. இரேசிதம்
  11. உத்தானவஞ்சிதம்
  12. பல்லவம்
  13. நிதம்பம்
  14. கசதந்தம்
  15. இலதை
  16. சுரிகை
  17. பக்கவஞ்சிதம்
  18. பக்கப் பிரதியோகம்
  19. கருட பக்கம்
  20. தண்ட பக்கம் 
  21. ஊர்த்துவ மண்டலி
  22. பக்க மண்டலி
  23. உரோ மண்டலி
  24. உரப்பார் சுவார்த்த மண்டலி
  25. முட்டிகச் சுவர்த்திகம்
  26. நளினீபதும கோசம்
  27. அலபதுமம்
  28. உற்பணம்
  29. இலளிதை
  30. வலிதை

இவை சுத்தானந்தப் பிரகாசம் என்னும் தமிழ்ப் பரதவியலில் காணப்பட்டவை 


No comments:

Post a Comment