Pages

Tuesday, 18 November 2025

அடியார்க்கு நல்லாரின் மேற்கோள்கள்

அடியார்க்கு நல்லார் முன்னோர் நூல்களுக்கு உரை எழுதுகையில் மேற்கோளாகப் பல பாடல்களயும் நூல்களையும் குறிப்பிடுகின்றார். 

அவற்றை மிகுதி நோக்கி வரிசைப்படுத்தினால்

1

பெருங்கதை. 
  • இதனைக் கதை என்றும், உதயணன் கதை என்றும் குறிக்கிடுகிறார். இதிலிருந்து இவர் தரும் எடுத்துக்காட்டுகளில் பல இறந்துபோன பெருங்கதையில் இருந்தனபோலும். 
  • இடைச்சங்கத்தார் பாடிய கலி, குருகு, வெண்டாளி நூல்களை ஆராய்ந்து பாடிய நூல் பெருங்கதை என்கிறார். 
  • பெருங்கதை 8-ஆம் நூற்றாண்டில் தோன்றிய நூல். 
  • இதனால் இடைச்சங்க நூல்கள் என இவர் குறிப்பிடுபவை 8-ஆம் நூற்றாண்டு வரையில் வழக்கில் இருந்தன எல்லாம். 

2

சிந்தாமணி

இறந்துபோன நூல்களில் 5 

ஆசிரியமாலை, 
பெரும்பொருள் விளக்கம், 
செயிற்றியம், 
கூத்தநூல், 
வளையாபதி 

இப்போதுள்ள நூல்களில் 

கலிங்கத்துப்பரணி, 
கலித்தொகை, 
புறப்பொருள் வெண்பாமாலை, 
மணிமேகலை. 
சூளாமணி, 
இராமாயண உத்தர காண்டம், 
திருக்குறள், 
திருக்கோவையார், 
திவாகரம், 
பிங்கலம், 
புறநானூறு ஆகியவை குறிப்பிடத்தக்கவை. 

கனாநூல் பாட்டுகள் பலவற்றை இவர் தருகிறார். 
இந்த நூல் இன்று இல்லை. 

பாசுரத் தொடர்கள்


"எங்கள் கண் முகப்பே" - (கருவூர்த்தேவர் & திருமங்கையாழ்வார்)
"வடவர் உட்கும்" - (பதிற்றுப்பத்து - ஐந்தாம் பத்து)

மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 12ஆம் நூற்றாண்டு பாகம் 2, பார்க்கர் அச்சகம் பதிப்பு, 1973, பக்கம் 43



No comments:

Post a Comment