அடியார்க்கு நல்லார் உரை காட்டும் சில பழமொழிகளும், மொழி-வழக்குகளும், பழக்கவழக்கங்களும் எண்ணத் தக்கவை.
பழமொழி
- விளையாட்டுப் பூசல் வினையாயிற்று
- திருவாணைக்கு மேலாய ஆணை இல்லை
- கெட்டால் மதி தோன்றும்
மொழி வழக்கு
- தெழித்தல் - பிரித்தலும் ஆம். இது குடநாட்டார் வழக்கு
- பனி என்பதோர் நோய் உண்டு. இது குடநாட்டார் வழக்கு
- பணித்தல் - அருளிச் செய்தல். இது திசைசொல். (என்னைப் பணித்தான்). இது பணிவிடை எனவும் வழங்கப்படும்.
- சொன்னோம் சொன்னனோம்
- நீயிரே இதனைச் செய்வீராயின் (எனக்குக் கவலை இல்லை)
மக்கள் வழக்கம்
தண்டனை
- பதியிலார் என்போர் கணவன் இல்லாத பெண். பதியிலார் இல்லம் புகுந்து குற்றம் செய்தவருக்கு என்ன தண்டனை வழங்கினர்? 7 செங்கலை அவன் தலையில் சுமத்தி ஊரைச் சுற்றிவரச் செய்து, ஊரை விட்டு அவனை ஒதுக்கி வைப்பபர்.
முத்து நோக்குவார்
முத்தின் தரம் காண்போர்
- நீலநிறத் துணியால் பந்தல் போட்டு முத்தில் ஒளி விழுதலைக் கொண்டு முத்தின் தரத்தை மதிப்பர்.
நறுமடி
- துணிக்கடையில் மணக்கும் பொருள்களைத் தூவி வைப்பர். அதனால் துணியில் மணம் வீசும். இந்தத் துணியை ‘நறுமடி’ என்றனர்.
விரதம்
நோன்பு
- 2 உவாநாள் (அம்மாவாசை, பௌர்ணமி), அட்டமி நாள்களில் பட்டினி கிடந்து உண்ணும் பழக்கம். இதனைப் பெரும்பாடு என்றும் வழங்குவர்.
நங்கை
- மருமகளை நங்கை என்னும் சொல்லால் குறிப்பிட்டு வழங்கினர்
இடுவந்தி
- குற்றம் இல்லாதவன் மேல் குற்றம் சுமத்துதல்.
மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 12ஆம் நூற்றாண்டு பாகம் 2, பார்க்கர் அச்சகம் பதிப்பு, 1973, பக்கம் 42
No comments:
Post a Comment