அடியார்க்கு நல்லார் உரையில் எண்ணற்ற சொற்களும், தொடர்களும் சுவையான பொருளை உணர்த்துகின்றன. அவற்றுள் சில:
அத்திரி
- கோவலன் இராச வாகனமாகிய அத்திரி ஏற
- அத்திரி - கோவேறு கழுதை
இடம் பிடித்தல்
- பெருநீர் இடம் பிடிக்க விரைந்து செல்லும் மக்களோடு
- (பேருந்தில் இடம் பிடிக்க - இக்காலம்)
உண்டல் = உறுதல் (துணைவினை)
- கட்டுண்டான் - கட்டப்பட்டான் - கட்டுற்றான்
கடன்
- தன்னைத் தான் இடும் பலிக் கடன்
"அக்கழுத்தினுடன் சிரத்தை அரிவர் ஆலோஅரிந்த சிரம் அணங்கின் கைக் கொடுப்பர் ஆலோகொடுத்த சிரம் கொற்றவையைத் துதிக்கும் ஆலோகுறை உடலம் கும்பிட்டு நிற்கும் ஆலோ (கலிங்கத்துப் பரணி)
சாத்தன்
- மகாசாஸ்தா
- ஐயனார்
- சாத்திரங்களைப் பயின்ற மகாசாத்திரன்
புனிதன் (அருகன் பெயர்)
- புதியவன்
புராணன் (அருகன் பெயர்)
- பழையவன்
பண்ணை
- ஓடைகள் பாயும் வயல்
பொறை
- மண் மேடிட்டிருக்கும் சிறு மலை
திசைமுகம் பசந்து
- திசையாகிய முகமானது மாலை வேலையில் பொன்-நிறம் பெற்று
- காடுகிழாள் வெயில்
- பசலை - பீர்க்கம்பூ நிறம் - பொன் நிறம்
முகவைப் பாட்டு
- முகந்து அளக்கும்போது எண்ணலைப் பண்ணிசையுடன் பாடும் பாட்டு
- கயிறு குறு முகவை
- ஏற்றம் இறைக்கும்போது பாடும் ஏற்றப்பாட்டு
வச்சிரம்
- இருதலைச் சூலம்
- நடுவில் பிடித்து எந்தப் பக்கத்திலும் வீசக்கூடிய படைக்கருவி
"காதல் கொழுநனைப் பிரிந்து அலர் எய்தா
மாதர்க் கொடுங்குழை மாதவி தன்னொடு"
- புகாரில் இந்திர விழா
- வேனில் காலம்
- மாதவி, முல்லை, மல்லிகை, மயிலை, தாழியில் வளர்த்த குவளை, செங்கழுநீர் மலர்களால் கட்டப்பட்ட மாலை அணிவிக்கப்பட்ட யாழை மாதவி கோவலன் கையில் தருகிறாள்.
- இவற்றில் மாதவிப் பூ மட்டும் மேலே கண்டவாறு விளக்கிக் கூறப்பட்டுள்ளது.
- இதற்கு அடியார்க்கு நல்லார் உரை எழுதும்போது
- மாதவி பூவுக்குத் தரப்பட்டுள்ள அடைமொழித்தொடர் மாதவிக்கும் கண்ணகிக்கும் பொருந்தும் என்று காட்டி உரை எழுதுகிறார்.
- காதலனைப் பிரிந்திருக்கும்போதும் அலர் தூற்றப்பபடாதவள் மாதவி, கண்ணகி ஆகிய இருவரும் என்று குறிப்பிட்டுக் காட்டுகிறார்.
ஆறிய கற்பு, சீறிய கற்பு
- இந்தத் தொடர் இன்று மேடைகளில் முழங்கப்படுகிறது
- இந்தத் தொடரை அன்றே குறிப்பிட்டவர் அடியார்க்கு நல்லார்.
- மாதவி ஆறிப்போன கற்புடையவளாகத் திகழ்ந்தாள்
- கண்ணகி சீற்றம் கொண்ட கற்புடையவளாக மாறினாள்
மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 12ஆம் நூற்றாண்டு பாகம் 2, பார்க்கர் அச்சகம் பதிப்பு, 1973, பக்கம் 40
No comments:
Post a Comment