அடியார்க்கு நல்லார் சிலப்பதிகாரம் நூலுக்கு உரை எழுதினார். அதில் இசைத் தமிழ், நாடகத் தமிழ் பற்றிய செய்திகள் பலவற்றைத் தந்துள்ளார். அவை எங்கிருந்து திரட்டப்பட்டன என்பதையும் குறிப்பிடுகிறார். அந்த 5 இலக்கண நூல்கள் பற்றிய குறிப்புகள் இங்குத் தரப்படுகின்றன.
இசைத்தமிழ் நூல்கள்
இசைநுணுக்கம்
- இது வெண்பா யாப்பால் ஆனது
- இதனை இயற்றிய ஆசிரியர் சிகண்டி
- சாரகுமரன் இசை பற்றித் தெரிந்துகொள்ள இதனை எழுதினார்.
- சிகண்டி குறுமுனிவர் அகத்தியனின் மாணாக்கர்.
இந்திர காளியம்
- இது நூற்பா (சூத்திரம்) யாப்பில் அமைந்த நூல்
- இதனை இயற்றியவர் யமளேந்திரர்
- இவர் பராசர முனிவர்.
- இது பாட்டியல் இலக்கணம் பற்றிக் கூறும் நூல்
நாடகத்தமிழ் நூல்கள்
பஞ்சமரபு
- இது வெண்பா யாப்பில் அமைந்த நூல்
- இதனை இயற்றியவர் அறிவனார்
- இந்த நூலின் ஒரு பகுதி வே ரா தெய்வசிகாமணிக் கவுண்டர் மூலம் தனக்குக் கிடைத்ததாக மு. அருணாசலம் குறிப்பிடுகிறார்.
பரத சேனாபதீயம்
- இது வெண்பா யாப்பால் அமைந்த இலக்கண நூல்
- இதனை இயற்றியவர் ஆதிவாயிலார்.
மதிவாணனார் நாடகத்தமிழ் நூல்
- இது நூற்பா யாப்பால் ஆனது
- இதனை இயற்றியவர் பாண்டியன் மதிவாணனார்
- வசைக்கூத்துக்கு மறுதலையாக இசைக்கூத்து (புகழ்க்கூத்து) அமைந்திருக்கும் செய்தியை இது குறிப்பிடுகிறது.
மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 12ஆம் நூற்றாண்டு பாகம் 2, பார்க்கர் அச்சகம் பதிப்பு, 1973, பக்கம் 22 அட்டவணை
No comments:
Post a Comment