கடையெழு வள்ளல்கள் என்று போற்றப்படுபவர்களில் ஆய் ஒருவன். (புறநானூறு 158)
இந்த ஆய் அரசனைப் புலவர் அற விலை வணிகன் அல்லன் என்று புலவர் குறிப்பிடுகிறார்.
கொடை வழங்குபவர் உலகில் பலர். அவர்கள் என்ன நினைத்துக்கொண்டு அறம் செய்கிறார்கள்?
அறத்தை விலை பேசி இறைவனிடம் விற்கின்றனர். இந்தப் பிறவியில் நான் கொடை வழங்குகிறேன். அடுத்த பிறவியில் அதற்குத் தகுந்த பலனை எனக்குத் தரவேண்டும் என்று விலை பேசி விற்கின்றனர்.
ஆய் வள்ளல் இந்த நினைவோடு கொடை தருவது இல்லையாம்.
கொடை வழங்குவது சான்றோர் நடந்து காட்டிய வழிமுறை என்று நினைத்துக்கொண்டு கொடை வழங்குவானாம்.
No comments:
Post a Comment