Pages

Monday, 16 June 2025

தேற்றா ஈகை

தேற்றா ஈகை என்பது ஒரு தகைமொழி. இந்தத் தகைமொழியைப் பெற்றிருப்பவன் நாஞ்சில் வள்ளுவன்

இது வஞ்சப் புகழ்ச்சி

மனத் தெளிவில்லாத கொடை - என்பது இதன் பொருள். 

ஔவையார் இந்தத் தகைமொழியை நாஞ்சில் வள்ளுவனுக்கு வழங்குகிறார். 

ஔவையார் வள்ளல்களை நாடி ஊர் ஊராகச் செல்வார். அப்படிச் செல்லும்போது வழியில் சமைத்து உண்ணும் காட்டுக் கீரை தழைத்துக் கிடந்தது. அதனை அவர் பறித்துக்கொண்டு சென்றார். 

குமரி மாவட்டத்தில் நாஞ்சில் நாடு உள்ளது. சங்ககாலத்தில் ஒரு காலகட்டத்தில் வள்ளுவன் என்பவன் அதனை ஆண்டுவந்தான். அவனிடம் ஔவையார் சென்றார்.

"கீரை வைத்திருக்கிறேன். அதனோடு சேர்த்துச் சமைத்து உண்ணக் கொஞ்சம் அரிசி தருக" என்று கேட்டார். 

கொஞ்சம் அரிசி மட்டும் தருவது தன் தகுதிக்கு உகந்தது ஆகாது என்று எண்ணி வள்ளுவன் ஒரு யானையை ஔவையாருக்குப் பரிசாக வழங்கினான். 

கீரையோடு சேர்த்துச் சமைக்கவே ஔவையாரிடம் அரிசி இல்லை. யானைக்குச் சோற்றுக் கவளம் சமைத்துத் தர அரிசிக்கு ஔவையார் எங்கே போவார்? 

இது தெளிவில்லாத கொடை அல்லவா?

தகைமொழி விளக்கம்


No comments:

Post a Comment