கொடை மடம் என்பது கடையெழு வள்ளல்களில் ஒருவனான பேகனைப் போற்றும் தகைமொழி. (புறநானூறு 142)
மழையானது நீர் இல்லாத குளத்தில் பொழியவேண்டும். வயலில் பொழியவேண்டும்.
அவ்வாறன்றிக் களர் நிலத்திலும் பொழிவது போல வள்ளல் பேகன் கொடை வழங்குவதில் ஒரு மடையனாக விளங்குபவன்.
ஆனால் போரின்போது மடமை இல்லாதவன். நல்லவர்களை விலக்கி அல்லாதவர்களைக் கொல்பவன். இது படை மடம்
மயில் உடுத்திக்கொள்ளாது, போர்த்திக்கொள்ளாது எனத் தெரிந்திருந்தும், தான் குளிரில் நடுங்கும்போது போர்த்தியிருந்த மேலாடையை ஆடும் மயிலுக்குக் குளிரில் அது நடுங்குவதாக எண்ணிப் போர்த்திவிட்டவன். சிறிதோ, பெரிதோ, எந்த அளவாயினும் ஈதல்தான் பெரிது எனச் செயல்படுபவன். அவன் பிறரது வறுமை நிலைமையைப் பார்த்து அதனைப் போக்கும் அளவுக்கு வழங்குவான். (புறநானூறு 141)
No comments:
Post a Comment