ஆதனுங்கன் என்னும் வள்ளல் அறத்துறை என்னும் தகைமொழியால் போற்றப்படுகிறான். - புறநானூறு 175
கரும்பனூர் கிழான் என்னும் வள்ளல் அறத்துறை அம்பி என்னும் தகைமொழியால் போற்றப்படுகிறான். - புறநானூறு 381
ஆற்றில் உள்ள நீர்த்துறை எல்லாருக்கும் பயன்படுகிறது.
அது போன்றது அறத்துறை.
அறத்தில் சிறந்தது கொடை. தன்னை, தன்னிடம் உள்ள செல்வத்தைப் பிறருக்குப் பயன்படுமாறு தருவது கொடை.
வாழ்க்கை ஆற்றில் கொடை என்பது ஒரு துறை. வேங்கட நாட்டு அரசன் ஆதனுங்கன். ஆதன் மகன் நுங்கன்.
பனங்காயில் எடுத்துத் தின்னும் நுங்கு போன்றவன் நுங்கன்.
நும் அவன் = நுங்கன்.
இவ்வாறு அவன் பெயருக்கு விளக்கம் காணலாம்.
சோற்றுத்துறை என்பது தமிழ்நாட்டில் உள்ள ஊர். அது வந்தவருக்கெல்லாம் சோறு வழங்கிய ஊர். அதுபோல வேங்கட நாட்டில் அறத்துறையாக விளங்கியவன் இந்த நுங்கன்.
அறத்துறை அம்பி
ஆற்றைக் கடக்க உதவுவது அம்பி. (ஓடம், பரிசல் - வகை). இளையர் - முதியர், ஆண் - பெண், நல்லவர் - கெட்டவர், ஏழை - பணக்காரர் என்று எல்லாரையும் அம்பி ஏற்றிச் செல்லும். கரும்பனூர் கிழானும் எல்லாருக்கும் உதவினான். எனவே இவன் அறத்துறை அம்பி எனப்பட்டான்.
No comments:
Post a Comment