உழிஞை வீரர்கள்
காவல்காட்டைக் கடக்கும்
போர் நிலையைக் கூறுவது
முது உழிஞை
என்னும்
புறப்பொருள் துறை ஆகும்.
இதனைச் சொல்லும் மேற்கோள் பாடல்:
கோடு உயர் வெற்பில் நிலம் கண்டு இரை கொள்ளும்
தோடு கொள் புள்ளின் தொகை ஒப்பக் - கூடார்
முரண் அகத்துப் பாற முழவுத்தோள் மள்ளர்
அரண் அகத்துப் பாய்ந்து இழிந்தார் ஆர்த்து.
மூங்கில் அடர்ந்த காட்டில் இரை தேடும் பறவைக் கூட்டம் போல, உழிஞைப் போர் மள்ளர் காட்டரண் காவலர்களோடு போரிட்டு வென்று உள்ளே நுழைந்தனர்.
உழிஞைப்படலம் / உழிஞைத்திணை
புறப்பொருள் வெண்பா மாலை PDF பக்கம் 85
பாடல் - சொல் பிரிப்பு
புதுப்புது சொற்றொடர்
No comments:
Post a Comment