Pages

Monday, 16 June 2025

முது உழிஞை (2) 6-21

மதில் காப்போரின் நிலையினைச் சொல்லுதலும் 
முது உழிஞை என்னும் புறப்பொருள் துறை ஆகும். 

இதனைச் சொல்லும் மேற்கோள் பாடல்:

அறியார் வயவர் அகத்து இழிந்த பின்னும் 
நெறியார் நெடுமதில் நேரார் - மறியாம்
கிளியொடு நேராம் கிளவியார் வாள் கண்
களியுறு காமம் கலந்து. 

உழிஞை வீரர்கள் மதிலைக் கடந்து உள்ளே நுழைந்ததை அறியாமல் நொச்சி வீரர்கள் மகளிரொடு காம இன்பம் கண்டுகொண்டிருந்தனர். 
மகளிர் 
மான் போன்றவர்
கிளி மொழியர்
வாள் போன்ற கண்ணர்  

உழிஞைப்படலம் / உழிஞைத்திணை

பாடல் - சொல் பிரிப்பு
புதுப்புது சொற்றொடர்

No comments:

Post a Comment