உழிஞையர் நொச்சியாரை வென்றது பற்றிக் கூறுவது
அகத்து உழிஞை என்னும் புறப்பொருள் துறை ஆகும்.
இதனைச் சொல்லும் மேற்கோள் பாடல்:
செங்கண் மறவர் சினம் சொரி வாள் சென்று இயங்க
அங்கண் விசும்பின் அணி திகழும் - திங்கள்
முகத்தார் அலற முகில் உரிஞ்சும் சூழி
அகத்தாரை வென்றார் அமர்.
- மறவர் வாள் சினமழை பொழிந்துகொண்டு இயங்கிற்று.
- மதிலின் அகத்தில் உள்ளவர்களை உழிஞையர் வென்றனர்.
- அது கண்டு வானில் அழகைக் காட்டும் நிலா போன்ற முகம் கொண்ட அழகியர் அலறினர்.
உழிஞைப்படலம் / உழிஞைத்திணை
புறப்பொருள் வெண்பா மாலை PDF பக்கம் 86
பாடல் - சொல் பிரிப்பு
புதுப்புது சொற்றொடர்
No comments:
Post a Comment