Pages

Monday, 16 June 2025

முற்று முதிர்வு 6-23

மதிலின் உள்பக்கத்தில் இருப்பவர் 
காலையில் முரசு முழங்குவதைக் கேட்டு 
வெளியில் இருக்கும் உழிஞையர் 
சினம் கொள்வது 
பற்றிக் கூறுவது 
முற்று முதிர்வு 
என்னும் புறப்பொருள் துறை 
ஆகும். 

இதனைச் சொல்லும் மேற்கோள் பாடல்:

காலை முரசம் மதில் இயம்பக் கண் அனன்று 
வேலை விறல் வெய்யோன் நோக்குதலும் - மாலை 
அடுகம் அடிசில் என்று அம் மதிலுள் இட்டார் 
தொடு கழலார் மூழை துடுப்பு. 

  • நொச்சியாரின் காலை-முரசம் முழங்கிற்று.
  • உழிஞையான் கண் கனலைக் கக்கிற்று 
  • தன் வேலைக் கையில் எடுத்தான் 
  • மாலையில் பிணச்சோறு சமைப்போம் என்று அகப்பையையும், துடுப்பையும் வேலுடன் சேர்த்து எடுத்துக்கொண்டான். 

உழிஞைப்படலம் / உழிஞைத்திணை

பாடல் - சொல் பிரிப்பு
புதுப்புது சொற்றொடர்

No comments:

Post a Comment