மதிலின் உள்பக்கத்தில் இருப்பவர்
காலையில் முரசு முழங்குவதைக் கேட்டு
வெளியில் இருக்கும் உழிஞையர்
சினம் கொள்வது
பற்றிக் கூறுவது
முற்று முதிர்வு
என்னும் புறப்பொருள் துறை
ஆகும்.
இதனைச் சொல்லும் மேற்கோள் பாடல்:
காலை முரசம் மதில் இயம்பக் கண் அனன்று
வேலை விறல் வெய்யோன் நோக்குதலும் - மாலை
அடுகம் அடிசில் என்று அம் மதிலுள் இட்டார்
தொடு கழலார் மூழை துடுப்பு.
- நொச்சியாரின் காலை-முரசம் முழங்கிற்று.
- உழிஞையான் கண் கனலைக் கக்கிற்று
- தன் வேலைக் கையில் எடுத்தான்
- மாலையில் பிணச்சோறு சமைப்போம் என்று அகப்பையையும், துடுப்பையும் வேலுடன் சேர்த்து எடுத்துக்கொண்டான்.
உழிஞைப்படலம் / உழிஞைத்திணை
புறப்பொருள் வெண்பா மாலை PDF பக்கம் 85
பாடல் - சொல் பிரிப்பு
புதுப்புது சொற்றொடர்
No comments:
Post a Comment