Pages

Monday, 16 June 2025

யானை கைக்கோள் 6-24

மதிலோரின் யானையையும், 
காவலர்களையும் கொன்று 
மதிலைக் கைப்பற்றுதலைக் கூறுவது 
யானை கைக்கோள் 
என்னும் 
புறப்பொருள் துறை 
ஆகும். 

இதனைச் சொல்லும் மேற்கோள் பாடல்:

ஏ வல் இகல் மறவர் வீய இகல் கடந்து 
காவலும் யானையும் கைக்கொண்டான் - மா வலான் 
வம்பு உடை ஒள் வாள் மறவர் தொழுது ஏத்த
அம்புடை ஞாயில் அரண். 

  • அது அம்பு எய்வோர் காக்கும் கோட்டை.
  • அதனைக் காக்கும் நொச்சி வில் வீரர் படையை வீழ்த்தி மதிலைக் காக்கும் காவர்களையும், யானையையும் உழிஞையர் கைப்பற்றித் தன் பக்கம் சேர்த்துக்கொண்டனர். 
  • அப்போது நொச்சி வாள்மறவர் தொழுதனர்.  

உழிஞைப்படலம் / உழிஞைத்திணை

பாடல் - சொல் பிரிப்பு
புதுப்புது சொற்றொடர்

No comments:

Post a Comment