மதிலோரின் யானையையும்,
காவலர்களையும் கொன்று
மதிலைக் கைப்பற்றுதலைக் கூறுவது
யானை கைக்கோள்
என்னும்
புறப்பொருள் துறை
ஆகும்.
இதனைச் சொல்லும் மேற்கோள் பாடல்:
ஏ வல் இகல் மறவர் வீய இகல் கடந்து
காவலும் யானையும் கைக்கொண்டான் - மா வலான்
வம்பு உடை ஒள் வாள் மறவர் தொழுது ஏத்த
அம்புடை ஞாயில் அரண்.
- அது அம்பு எய்வோர் காக்கும் கோட்டை.
- அதனைக் காக்கும் நொச்சி வில் வீரர் படையை வீழ்த்தி மதிலைக் காக்கும் காவர்களையும், யானையையும் உழிஞையர் கைப்பற்றித் தன் பக்கம் சேர்த்துக்கொண்டனர்.
- அப்போது நொச்சி வாள்மறவர் தொழுதனர்.
உழிஞைப்படலம் / உழிஞைத்திணை
புறப்பொருள் வெண்பா மாலை PDF பக்கம் 86
பாடல் - சொல் பிரிப்பு
புதுப்புது சொற்றொடர்
No comments:
Post a Comment