முற்றுகையை விட்டுவிட்டுச் செல்லுமாறு போரிட்டு
நாட்டைக் காத்ததைச் சொல்வது
வேற்றுப்படை வரவு
என்னும் புறப்பொருள் துறை ஆகும்.
இதனைச் சொல்லும் மேற்கோள் பாடல்:
உவனின்று உறு துயரம் உய்யாமை நோக்கி
அவன் என்று உலகு ஏத்தும் ஆண்மை - இவன் இன்றி
மற்று யார் செய்வார் மழை துஞ்சு நீள் அரணம்
முற்றியார் முற்று விட.
- கோட்டைக்குள் இருப்பவர்கள் துன்பம் இல்லாமல் இருப்பதைப் பார்த்து "இவனைத் தவிர வேறு யாரால் இப்படிக் காப்பாற்ற முடியும்" என்று மதில் அரசனின் ஆண்மையை உலகம் பாராட்டிற்று.
- முற்றுகை இட்ட அரசனும் முற்றுகையை விலக்கிக்கொண்டான்.
உழிஞைப்படலம் / உழிஞைத்திணை
புறப்பொருள் வெண்பா மாலை PDF பக்கம் 87
பாடல் - சொல் பிரிப்பு
புதுப்புது சொற்றொடர்
No comments:
Post a Comment