Pages

Monday, 16 June 2025

வேற்றுப்படை வரவு 6-25

முற்றுகையை விட்டுவிட்டுச் செல்லுமாறு போரிட்டு 
நாட்டைக் காத்ததைச் சொல்வது 
வேற்றுப்படை வரவு 
என்னும் புறப்பொருள் துறை ஆகும். 

இதனைச் சொல்லும் மேற்கோள் பாடல்:

உவனின்று உறு துயரம் உய்யாமை நோக்கி 
அவன் என்று உலகு ஏத்தும் ஆண்மை - இவன் இன்றி
மற்று யார் செய்வார் மழை துஞ்சு நீள் அரணம் 
முற்றியார் முற்று விட. 

  • கோட்டைக்குள் இருப்பவர்கள் துன்பம் இல்லாமல் இருப்பதைப் பார்த்து "இவனைத் தவிர வேறு யாரால் இப்படிக் காப்பாற்ற முடியும்" என்று மதில் அரசனின் ஆண்மையை உலகம் பாராட்டிற்று. 
  • முற்றுகை இட்ட அரசனும் முற்றுகையை விலக்கிக்கொண்டான்.

உழிஞைப்படலம் / உழிஞைத்திணை

பாடல் - சொல் பிரிப்பு
புதுப்புது சொற்றொடர்

No comments:

Post a Comment