Pages

Tuesday, 17 June 2025

உழுது வித்திடுதல் 6-26

பகை நாட்டை அழித்து, 
கழுதையை ஏரில் பூட்டி 
அழித்த நிலத்தை உழுது, 
வரகும் கொள்ளும் விதைப்பது 
பற்றிக் கூறுவது 
உழுது வித்திடுதல் 
என்னும் புறப்பொருள் துறை ஆகும். 

இதனைச் சொல்லும் மேற்கோள் பாடல்:

எழுது எழில் மாடத்து இடன் எல்லாம் நூறிக்
கழுதை ஏர் கை எறி வேல் கோலா - உழுததன் பின் 
வெள் வரகு கொள் வித்து இடினும் விளியாதால் 
கள் வரவு தாரான் கதம். 

  • மாடி வீடுகளைத் துகளாக்கினான். 
  • அந்த வீட்டு நிலத்தில் கழுதையை வேல்-ஏரில் பூட்டி உழுதான் 
  • அதில் வரகும் கொள்ளும் விதைத்தான். 
  • இப்படியெல்லாம் செய்த பின்னரும் உழிஞை மன்னன் சினம் மாறவில்லை.

உழிஞைப்படலம் / உழிஞைத்திணை

பாடல் - சொல் பிரிப்பு
புதுப்புது சொற்றொடர்

No comments:

Post a Comment