பகை நாட்டை அழித்து,
கழுதையை ஏரில் பூட்டி
அழித்த நிலத்தை உழுது,
வரகும் கொள்ளும் விதைப்பது
பற்றிக் கூறுவது
உழுது வித்திடுதல்
என்னும் புறப்பொருள் துறை ஆகும்.
இதனைச் சொல்லும் மேற்கோள் பாடல்:
எழுது எழில் மாடத்து இடன் எல்லாம் நூறிக்
கழுதை ஏர் கை எறி வேல் கோலா - உழுததன் பின்
வெள் வரகு கொள் வித்து இடினும் விளியாதால்
கள் வரவு தாரான் கதம்.
- மாடி வீடுகளைத் துகளாக்கினான்.
- அந்த வீட்டு நிலத்தில் கழுதையை வேல்-ஏரில் பூட்டி உழுதான்
- அதில் வரகும் கொள்ளும் விதைத்தான்.
- இப்படியெல்லாம் செய்த பின்னரும் உழிஞை மன்னன் சினம் மாறவில்லை.
உழிஞைப்படலம் / உழிஞைத்திணை
புறப்பொருள் வெண்பா மாலை PDF பக்கம் 87
பாடல் - சொல் பிரிப்பு
புதுப்புது சொற்றொடர்
No comments:
Post a Comment