வென்றவன்
தன் வாளைப்
புனித நீரில்
நீராட்டுவது பற்றிக் கூறுவது
வாள் மண்ணு நிலை
என்னும் புறப்பொருள் துறை
ஆகும்.
இதனைச் சொல்லும் மேற்கோள் பாடல்:
தீர்த்த நீர் பூவோடு பெய்து திசை விளங்கக்
கூர்த்த வாள் மண்ணிக் கொடித் தேரான் - பேர்த்தும்
இடி ஆர் பணை துவைப்ப இம் மதிலுள் வேட்டான்
புடையார் அறையப் புகழ்.
- வெற்றி பெற்ற கொடித்தேரான் தன் வாளுக்குப் பூ சூட்டி புனித நீர் பெய்து குளிப்பாட்டினான்.
- அப்போது முரசு முழங்கிற்று.
- மதிலுக்குள் இந்தப் படையல் வேள்வி (விழா) நடைபெற்றது.
- அருகிலிருந்தவர்கள் அவனைப் பாராட்டினர்.
உழிஞைப்படலம் / உழிஞைத்திணை
புறப்பொருள் வெண்பா மாலை PDF பக்கம் 88
பாடல் - சொல் பிரிப்பு
புதுப்புது சொற்றொடர்
No comments:
Post a Comment