Pages

Tuesday, 17 June 2025

வாள் மண்ணு நிலை 6-27

வென்றவன் 
தன் வாளைப் 
புனித நீரில் 
நீராட்டுவது பற்றிக் கூறுவது 
வாள் மண்ணு நிலை 
என்னும் புறப்பொருள் துறை 
ஆகும். 

இதனைச் சொல்லும் மேற்கோள் பாடல்:

தீர்த்த நீர் பூவோடு பெய்து திசை விளங்கக் 
கூர்த்த வாள் மண்ணிக் கொடித் தேரான் - பேர்த்தும் 
இடி ஆர் பணை துவைப்ப இம் மதிலுள் வேட்டான் 
புடையார் அறையப் புகழ். 

  • வெற்றி பெற்ற கொடித்தேரான் தன் வாளுக்குப் பூ சூட்டி புனித நீர் பெய்து குளிப்பாட்டினான். 
  • அப்போது முரசு முழங்கிற்று. 
  • மதிலுக்குள் இந்தப் படையல் வேள்வி (விழா) நடைபெற்றது. 
  • அருகிலிருந்தவர்கள் அவனைப் பாராட்டினர்.

உழிஞைப்படலம் / உழிஞைத்திணை

பாடல் - சொல் பிரிப்பு
புதுப்புது சொற்றொடர்

No comments:

Post a Comment