Pages

Tuesday, 17 June 2025

மண்ணு மங்கலம் 6-28

பகைவரின் மதிலாகிய கன்னியை 
வென்றவன் 
சடங்குகளால் திருமணம் செய்துகொள்ளுதல் 
பற்றிக் கூறுவது 
மண்ணு மங்கலம் 
என்னும் புறப்பொருள் துறை 
ஆகும். 

இதனைச் சொல்லும் மேற்கோள் பாடல்:

எம் கண் மலர எயில் குமரி கூடிய 
மங்கல நாள் யாம் மகிழ் தூங்க - கொங்கு அலர் தார்ச் 
செய்ச் சுடர்ப் பூண் மன்னவன் சேவடிக் கீழ் வைகினவே 
மொய் சுடர்ப் பூண் மன்னர் முடி. 

  • பகைவர் மதிலை வென்று அந்த மதில் பெண்ணை மன்னவன் மகிழ்வுடன் மணந்துகொண்டான். 
  • அவன் அப்போது அவன் வெற்றிப் பூண் அணிந்துகொண்டான். 
  • அவன் காலடிகளை மன்னர்கள் பலர் வணங்கினர்.

உழிஞைப்படலம் / உழிஞைத்திணை

பாடல் - சொல் பிரிப்பு
புதுப்புது சொற்றொடர்

No comments:

Post a Comment