பகைவரின் மதிலாகிய கன்னியை
வென்றவன்
சடங்குகளால் திருமணம் செய்துகொள்ளுதல்
பற்றிக் கூறுவது
மண்ணு மங்கலம்
என்னும் புறப்பொருள் துறை
ஆகும்.
இதனைச் சொல்லும் மேற்கோள் பாடல்:
எம் கண் மலர எயில் குமரி கூடிய
மங்கல நாள் யாம் மகிழ் தூங்க - கொங்கு அலர் தார்ச்
செய்ச் சுடர்ப் பூண் மன்னவன் சேவடிக் கீழ் வைகினவே
மொய் சுடர்ப் பூண் மன்னர் முடி.
- பகைவர் மதிலை வென்று அந்த மதில் பெண்ணை மன்னவன் மகிழ்வுடன் மணந்துகொண்டான்.
- அவன் அப்போது அவன் வெற்றிப் பூண் அணிந்துகொண்டான்.
- அவன் காலடிகளை மன்னர்கள் பலர் வணங்கினர்.
உழிஞைப்படலம் / உழிஞைத்திணை
புறப்பொருள் வெண்பா மாலை PDF பக்கம் 88
பாடல் - சொல் பிரிப்பு
புதுப்புது சொற்றொடர்
No comments:
Post a Comment