Pages

Tuesday, 17 June 2025

மகட்பாலியல் 6-29

மகளைத் தனக்குத் தரவேண்டும் என்று 
அவள் தந்தையைக் கேட்பவன் 
நிலையைச் சொல்வது 
மகட்பாலியல் என்னும் 
புறப்பொருள் துறை ஆகும். 

இதனைச் சொல்லும் மேற்கோள் பாடல்:

அம் தழை அல்குலும் ஆடு அமை மென்தோளும் 
பைந்தளிர் மேனியும் பாராட்டித் - தந்தை
புற மதில் வைகும் புலம்பே தருமே 
மற மதில் மன்னன் மகள். 

  • அவள் மன்னன் மகள். தழையாடை அணிந்த அல்குல், அசைந்தாடும் மூங்கில் போன்ற தோள், பசுமையான மாந்தளிர் போன்ற மேனி ஆகியவற்றைக் கொண்டவள். அவளை விரும்பும் மன்னன் அவற்றைப் பாராட்டி, அவளைத் தனக்குத் தரும்படி அவள் தந்தையிடம் கேட்டு அவள் தந்தையின் கோட்டையை முற்றுகை இட்டிருக்கிறான். அந்த முற்றுகை எங்களைப் புலம்ப வைக்கிறது. 

உழிஞைப்படலம் / உழிஞைத்திணை

பாடல் - சொல் பிரிப்பு
புதுப்புது சொற்றொடர்

No comments:

Post a Comment