கோட்டையின் அரசன்
முற்றிய அரசனை வழிமொழிந்து
திறை தர,
அதனைப் பெற்றுக்கொண்டு
திரும்புவது பற்றிக் கூறுவது
திறை கொண்டு பெயர்தல்
என்னும் புறப்பொருள் துறை
ஆகும்.
இதனைச் சொல்லும் மேற்கோள் பாடல்:
கோடும் வயிரும் இசைப்பக் குழுமிளை
ஓடு எரி வேய உடன் உலாய்ப் - பாடி
உயர்ந்து ஓங்கு அரணத்து ஒன்னார் பணியப்
பெயர்ந்தான் பெருந்தகையினான்.
- தன் காவல் காட்டை எரித்து, உழிஞை அரசன், கோடு, வயிர் இசைக்கருவிகளை ஒலிப்பது கேட்டு, மதில் அரசன் பணிய, உழிஞை அரசன் போரிடாமல் திரும்பினான்.
உழிஞைப்படலம் / உழிஞைத்திணை
புறப்பொருள் வெண்பா மாலை PDF பக்கம் 89
பாடல் - சொல் பிரிப்பு
புதுப்புது சொற்றொடர்
No comments:
Post a Comment